அனைத்து இந்திய மருத்துவ அறிவியல் கழகம் (AIIMS) என்று டெல்லியில் இருப்பதுபோன்ற எய்ம்ஸ் மருத்துவமனை தற்போது நாடு முழுவதும் அமைக்கப்படுகிறது. இந்த மருத்துவமனை, தமிழகத்தில் மதுரை மாவட்டம் தோப்பூரில் 222 ஏக்கரில் அமைப்பதற்கு மத்திய அரசு கடந்த 2018 டிசம்பரில் ஒப்புதல் அளித்து, 2019 ஜனவரியில் பிரதமர் நரேந்திர மோடியால் அடிக்கல் நாட்டப்பட்டது.
மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமானப் பணிக்கான டெண்டர் இறுதி செய்யப்பட்டு, மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டு உள்ளது. அதனால், மார்ச் மாதம் இறுதியில் எய்ம்ஸ் கட்டுமானப் பணிகள் தொடங்க உள்ளதாக எய்ம்ஸ் வட்டாரங்கள் தெரிவித்தன. இந்த நிலையில் வாஸ்து தினமான இன்றைய தினம் எய்ம்ஸ் கட்டுமானப்பணிகள் வாஸ்து பூஜையுடன் தொடங்கப்பட்டுள்ளது.