மோடி, யோகிக்கு, பிறகு உங்களை யார்  காப்பாற்றுவார்கள்? எங்களுக்கும் நேரம் வரும் – அசாதுதீன் ஒவைசி மிரட்டல் பேச்சு..!

மோடி, யோகிக்கு, பிறகு உங்களை யார் காப்பாற்றுவார்கள்? எங்களுக்கும் நேரம் வரும் – அசாதுதீன் ஒவைசி மிரட்டல் பேச்சு..!

Share it if you like it

ஆல் இந்தியா மஸ்ஜிதே இத்திஹாதுல் முஸ்லிமீன் கட்சியின் தலைவர் மிரட்டல் பேச்சு.

இந்தியாவில் அதிக சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அதிக மக்கள் தொகை கொண்ட மாநிலம் எதுவென்றால் உத்தர பிரதேசம் என்பது அனைவரும் அறிந்ததே. உ.பி-யில் பா.ஜ.க தலைமையில் யோகி ஆதித்யநாத் ஆட்சி தற்பொழுது நடைப்பெற்று வருகிறது. சாமியார் எல்லாம் மாநில முதல்வரா? என்று பலர் அவரை கேலி, கிண்டல், செய்தாலும். தனது கடின உழைப்பின் மூலம் அம்மாநிலம் வேகமான வளர்ச்சி பாதையில் இன்று வரை சென்று கொண்டு இருக்கிறது என்பது பல அரசியல் நோக்கர்களின் கருத்து.

வெகுவிரைவில் உத்தர பிரதேசத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. ஆளும் பா.ஜ.க மற்றும் எதிர்க்கட்சியான சமாஜ்வாடி கட்சிக்கு இடையே மிக கடுமையாக தேர்தல் பரப்புரை தற்பொழுது நடைப்பெற்று வரும் சூழ்நிலையில், ஹைதராபாத் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினர் மற்றும் ஆல் இந்தியா மஸ்ஜிதே இத்திஹாதுல் முஸ்லிமீன் கட்சியின் தலைவருமான அசாவுதீன் ஓவைசி கட்சியும் உ.பி-யில் தனது வேட்பாளர்களை களத்தில் இறக்க உள்ளது.

இந்த நிலையில் ஓவைசி அவர்கள் பேசிய காணொளி ஒன்று தற்பொழுது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

அசாவுதீன் ஓவைசி கூறியதாவது ;

எந்த நேரமும் பிரதமராக மோடி இருக்க மாட்டார், அவர் ஒரு நாள் இயமலைக்கு செல்வார், யோகி தனது மடத்திற்கு திரும்புவார். மோடி, யோகிக்கு, பிறகு யார்? உங்களை காப்பாற்றுவார்கள் எங்களுக்கும் நேரம் வரும். எதையும் நாங்கள் மறக்க மாட்டோம் என்று மிரட்டல் விடுக்கும் வகையில் அவர் பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

Asaduddin Owaisi Age, Wife, Children, Family, Biography & More »  StarsUnfolded
அசாதுதீன் ஒவைசி தம்பி உடன்

நீங்கள் 80 கோடி பேர் இருக்கலாம் நாங்கள் வெறும் 15 கோடி பேர் இருக்கலாம் இந்தியாவில் உள்ள காவல்துறை 10 நிமிடம் கையை கட்டிக் கொண்டு இருந்தால் நாங்கள் யார்? என்பதை காட்டுவோம் பல ஆண்டுகளுக்கு முன்பு அசாதுதீன் ஒவைசி தம்பி பேசி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


Share it if you like it