நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூரில் என் மண் என் மக்கள் யாத்திரையின் இறுதியில், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, ஆளுநர் கையெழுத்திடவில்லை என்று கூறப்படும் கோப்புகள் அனைத்தும் திமுகவினர் தங்கள் சுயலாபத்துக்காக அனுப்பியவை. கடந்த 9 ஆண்டுகளில் மத்திய அரசு தமிழ்நாட்டுக்கு 4 லட்சத்து 77 ஆயிரத்து 855 கோடி ரூபாயை நேரடி நிதியாக வழங்கி உள்ளதாகவும்,இது முந்தைய காங்கிரஸ் – திமுக கூட்டணி ஆட்சியை விட 350 சதவீதம் அதிகம் என்று பேசினார்.
பிரதமர் மோடி தாம் கூறியதை போல இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கி வருவதாக குறிப்பிட்டுள்ள அவர், அதேபோன்று திமுக அரசு வேலை வழங்காதது ஏன் என்று கேள்வி எழுப்பியுள்ளார்.