தற்கொலைப்படை தாக்குதல்: அல்கொய்தா மிரட்டல்!

தற்கொலைப்படை தாக்குதல்: அல்கொய்தா மிரட்டல்!

Share it if you like it

டெல்லி, உ.பி., மும்பை, குஜராத் ஆகிய இடங்களில் தற்கொலைப்படைத் தாக்குதல் நடத்துவோம் என்று அல்கொய்தா பயங்கரவாத இயக்கம் எச்சரிக்கை விடுத்திருக்கிறது.

ஒரு தனியார் தொலைக்காட்சி நடத்திய விவாத நிகழ்ச்சியில் பங்கேற்ற ஒரு நபர், ஞானவாபி மசூதியில் கண்டெடுக்கப்பட்ட சிவலிங்கம் பற்றி சர்ச்சைக்குரிய வகையில் ஆபாசமாகப் பேசினார். இதற்கு பதிலளித்துப் பேசிய பா.ஜ.க.வைச் சேர்ந்த நுபுர் ஷர்மா, இஸ்லாமிய மதப் புத்தகத்தில் இடம்பெற்றிருக்கும் நபி, ஆயிஷா திருமணம் பற்றி பேசினார். இதையடுத்து, இஸ்லாமிய அடிப்படைவாதிகளால் நடத்தப்படும் ஊடகங்கள், நுபுர் ஷர்மா பேசிய காட்சியை மட்டும் எடிட் செய்து, இஸ்லாமிய நாடுகளின் தலைவர்களின் பார்வைக்கு அனுப்பி வைத்ததோடு, மதவெறியைத் தூண்டும் வகையில், தங்களது சேனல்களிலும் ஒளிபரப்பி, இஸ்லாமியர்களை தூண்டி விட்டனர்.

குறிப்பாக, ஏ.எல்.டி. (ஆல்ட்) என்கிற சேனலின் இணை இயக்குனரான முகமது ஜுபைர், இந்த வீடியோவை மீண்டும் மீண்டும் ஒளிபரப்பி, இஸ்லாமியர்கள் மத்தியில் குரோதத்தை தூண்டி விட்டார். இந்த வீடியோவை பார்த்த இஸ்லாமிய நாடுகள் பலவும், நுபுர் ஷர்மா பேச்சுக்கு கண்டனம் தெரிவித்தன. இதனிடையே, நுபுர் ஷர்மாவும், அவரது ட்விட்டர் பதிவை ரீட்விட் செய்த நவீன்குமார் ஜிந்தால் ஆகியோரை கட்சியிலிருந்து நீக்கியது பா.ஜ.க. தலைமை. இந்த சூழலில், இஸ்லாமிய நாடுகள் தரப்பில் இருந்து இந்தியாவுக்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டது. அதேசமயம், இஸ்லாமிய அடிப்படைவாதிகள் தரப்பிலிருந்து நுபுர் ஷர்மாவுக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டது. இதுகுறித்து அவர் டெல்லி போலீஸில் புகார் செய்தார். இதைத் தொடர்ந்து, அவருக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருக்கிறது. எனினும், இந்த விவகாரத்தில் கத்தார் நாடு கடுமை காட்டவே, இந்தியர்கள் பலரும் கத்தார் நாட்டுக்கு எதிராக ‘Boycott Qatar’ என்று ட்விட்டரில் பதிவிட்டு தங்களது எதிர்ப்பைத் தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில்தான், முகமது நபியை இழிவுபடுத்தியதாகக் கூறி இந்தியாவின் முக்கிய நகரங்களில் தற்கொலைப்படை தாக்குதல் நடத்தப்படும் என்று அல்கொய்தா பயங்கரவாத இயக்கம் எச்சரிக்கை விடுத்திருக்கிறது. இது தொடர்பாக, அந்த இயக்கம் சார்பில் அனுப்பப்பட்ட ஜூன் 6-ம் தேதியிட்ட கடிதத்தில், “சில நாட்களுக்கு முன்பு, இந்துத்துவாவின் பிரசாரகர்களும், கொடி ஏந்தியவர்களும் தொலைக்காட்சி விவாதத்தில் இஸ்லாம் குறித்தும், நபிகள் குறித்து அவதூறாக பேசியிருக்கிறார்கள். இந்த அவமானத்திற்கு பதிலளிக்கும் விதமாக, உலகெங்கிலும் உள்ள இஸ்லாமியர்களின் மனம் பலிவாக்கும் உணர்வால் நிரம்பி இருக்கிறது. நமது உடலிலும், நம் குழந்தைகளின் உடலிலும் வெடிகுண்டுகளை கட்டிக்கொண்டு, நமது நபியை இழிவுபடுத்தோர் அனைவரையும் கொல்ல வேண்டும். டெல்லி, மும்பை, உத்தரப் பிரதேசம், குஜராத் ஆகிய பகுதிகளில் நாங்கள் தற்கொலைப்படை தாக்குதல்களை நடத்துவோம். ஆகவே, மேற்கண்ட மாநிலங்களைச் சேர்ந்த காவி பயங்கரவாதிகள் தங்கள் முடிவுக்காக காத்திருக்க வேண்டும்” என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கிறது. இதையடுத்து, மேற்கண்ட மாநிலங்களில் மத்திய புலனாய்வு அமைப்பு பாதுகாப்பை தீவிப்படுத்தி இருக்கிறது.


Share it if you like it