மண்பானையே மாஸ் ஆனந்த் மஹிந்திரா ட்வீட்!

மண்பானையே மாஸ் ஆனந்த் மஹிந்திரா ட்வீட்!

Share it if you like it

குளிர்சாதன பெட்டியை விட மண்பானையே சிறந்தது என மஹிந்திரா அண்ட் மஹிந்திரா நிறுவன தலைவர் ஆனந்த் மஹிந்திரா தெரிவித்திருக்கிறார்.

உலக நாடுகள் மத்தியில் நன்கு அறிமுகமான தொழிலதிபர் ஆன்ந்த் மஹிந்திரா. இவர், இந்தியர்களின் புதிய கண்டுப்பிடிப்புகளை அடையாளம் கண்டு பாராட்ட கூடியவர். அந்த வகையில், நமது முன்னோர்கள் பயன்படுத்தி வரும் மண்பானைகளின் நன்மைகள் குறித்து வெகுவாக பாராட்டி இருக்கிறார். மேலும், இதுகுறித்து அவர் கூறியதாவது :

“வெளிப்படையாகச் சொல்வதென்றால் அழகியல் பார்வை அடிப்படையிலும், வடிவமைப்பு ரீதியாகவும் மண்பானையே மேலானது. நம் பூமி கோளுக்கு ஏற்ற வகையில் நேர்மறையாக உலகம் கவனம் செலுத்தி வரும் இச்சூழலில் பானை நம் வாழ்க்கை முறையில் சிறந்த அக்ஸசரியாக இருக்கும் என ட்வீட் செய்துள்ளார். மேலும், மண்பானை மற்றும் குளிர்சாதன பெட்டியின் விலை, லைஃப்-டைம், மெயின்டன்ஸ் போன்றவை ஒப்பீடு செய்து இருக்கிறார்.


Share it if you like it