தி.மு.க.வின் தீவிர ஆதரவாளரும் நெறியாளருமான செந்தில் பேசிய காணொளி ஒன்று தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
சீப்பு செந்தில் என நெட்டிசன்களால் அன்புடன் அழைக்கப்படுபவர் நெறியாளர் செந்தில். இவர், குரல் அற்றவர்களின் குரலாக ஒலிப்பேன். நான் நேர்மையான ஊடக நெறியாளர் என தம்மை காட்டிக்கொள்பவர். ஆனால், விடியல் ஆட்சியில் சந்தி சிரிக்கும் சட்டம் ஒழுங்கு குறித்து இன்று வரை இவர் பேசுவதில்லை. அதற்கு மாறாக, ஆளும் தி.மு.க. அரசிற்கு முட்டு கொடுப்பதிலேயே தனது முழு நேரத்தையும் செலவிட கூடியவர்.
இப்படிப்பட்ட சூழலில், நெறியாளர் செந்தில் பேசிய காணொளி ஒன்று பொதுமக்கள் மத்தியில் பெரும் சிரிப்பலையை ஏற்படுத்தி இருக்கிறது. இந்தகாணொளிதான், தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.