சனாதனம் – தர்ம சாஹரம் – ஆண்டி முத்து ராசாக்கள் அழிவை தேட வேண்டாம்

சனாதனம் – தர்ம சாஹரம் – ஆண்டி முத்து ராசாக்கள் அழிவை தேட வேண்டாம்

Share it if you like it

சனாதனம் அகழ்வாரை தாங்கும் நிலம் போல தன்னை இகழ்வார் பொறுத்தல் தலை என்றும் பொறுமையில் சிறந்த பூமாதேவி என்னும் அந்த தேவியை காட்டிலும் பொறுமையில் மிஞ்சியது அதனால் தான் வாழ்நாள் முழுவதும் சனாதனத்தை பழித்த பாவிகள் எல்லாம் இறுதி நாட்களில் ராமனை அவமதித்த பாவம் என்று கதறி அழுது ராமா என்று சொன்ன முடிவை கொடுத்தது. வாழ்நாள் முழுவதும் சனாதனைகளையும் சனாதனத்தையும் படித்தவனை இராமன் எந்த பொறியியல் கல்லூரியில் பட்டம் வாங்கினான் என்று ஏளனம் பேசியவனும் அந்த ராமனின் அனுஜனின் பாதம் பணிந்து ராமானுஜனிடம் தஞ்சம் அடைந்தபோது அவனுக்கும் உலக வாழ்க்கையில் இருந்து விடுதலை கொடுத்தது. அதே நேரம் சாது மிரண்டால் காடு கொள்ளாது என்ற நியதியில் அதர்மிகளை அழித்து தர்மத்தை நிலை நிறுத்த வல்லது.

சனாதனம் ஆட்சி அதிகாரத்தை பொய் புரட்டில் பெற்றுக் கொண்டு அந்த அதிகாரம் கொண்டு ஆலயத்தை இடித்து தகர்ப்பவர்களுக்கும் கோவிலுக்கு போவதே கொள்ளை அடிக்க நோட்டமிடத்தான் என்று போபவர்களையும் கூட அன்போடு அரவணைத்து மங்கல பிரசாதங்களை வழங்கி அனுப்பி வைக்கிறது. சனாதனம் படிப்பது பாரதம் இடிப்பது பெருமாள் கோவில் என்று இருப்பவர்களை கூட ஏதோ ஒரு வகையில் வழியில் அவர்கள் வாழ்வதற்கு வழிகாட்டி இன்றளவும் வழிநடத்தி போகிறது.

சனாதன தர்மம் தன்னை பின் தொடர யாரையும் வற்புறுத்தாது. பின் தொடர்ந்து வரும் யாரையும் புறம் தள்ளாது. அண்டி வரும் அனைத்தையும் அரவணைத்து வழி நடத்தும் உயர்ந்த மானுட தர்மம் சனாதனம்சனாதன தர்மம் ஆண்டி முத்து ராசாவின் கொல்லைப் புற வாழை இல்லை. அவர் நினைத்தவுடன் வெட்டி எறிய. சனாதனம் கோபால புர கொத்தடிமையும் இல்லை இளவரசர் நினைத்தால் இல்லாமல் போவதற்கு. சனாதனம் அதன் வழி வாழும் மக்களின் ஆத்ம ஞானம். பக்தி நெறியில் ஆன்மீக வழியில் பயணிப்பவர்களுக்கு சனாதனம் கலங்கரை விளக்கம். அதர்ம வழியில் வாழும் யாருக்கும் சனாதனமே சத்ரு.

சனாதன தர்மத்தை அழிக்கும் அளவில் வல்லமையும் திராணியும் இருக்குமே ஆனால் முதலில் ஆண்டிமுத்து ராசா அந்த சனாதன தர்மத்தின் வழியில் வந்த இந்து பட்டியல் சமூகம் சார்ந்தவன் என்ற அடையாளத்தையும் ஆவணத்தையும் தூக்கி எறியட்டும். தனது சமகால அடையாளத்துடன் அறிவாலய வாசலில் போய் நிற்கட்டும். பார்க்கலாம். அந்த சமகால அடையாளம் கொண்டு அடுத்து வரும் நாடாளுமன்றத் தேர்தலில் திமுகவின் நாடாளுமன்ற வேட்பாளர் என்ற அந்தஸ்தை அவர் பெற்றுவிட்டாரானால் அதன் பிறகு அவர் சனாதனத்தை எதிர்ப்பதை பற்றியும் அழிப்பதை பற்றியும் பேசட்டும். அதுவரையில் தனக்கு வாழ்வளித்த சனாதன தர்மத்தின் அடையாளத்தை முடிந்தால் அவர் பாதுகாத்துக் கொள்ளட்டும்.

ஏனெனில் தாயைப் பழித்தவனுக்கும் தண்ணீரை பழித்தவனுக்கும் கூட சனாதனத்தில் மன்னிப்பு உண்டு. ஆனால் தர்மத்தை பழித்தவனுக்கு ஒரு நாளும் மன்னிப்பு கிட்டியது இல்லை. அந்த வகையில் ஆண்டிமுத்து ராசாக்களின் அழிவு அவர்களின் வாயால் அவர்களின் செயலால் அவர்களின் எண்ணம் கொண்டே விரைவில் நடந்தேறும். சனாதனத்தை பழிக்கிறேன் என்று விஷமப் பிரச்சாரம் செய்யும் ஆராசா போன்ற விஷ நாகங்களுக்கு அவர்களின் வாயிலிருந்து வரும் நஞ்சு தோய்ந்த வார்த்தைகளே விஷமாகும். அவரவர் எண்ணம் போல் வாழ்க்கை என்பார்கள். ஆனால் தனக்கு வாழ்வளித்த அடையாளத்தையே பழிப்பான் எனில் அவன் நிச்சயம் மனித பிறவியாக இருக்க முடியாது . அப்படிப்பட்ட இழி பிறவிகளுக்கு சனாதனம் ஒரு நாளும் வசப்படாது. சனாதனிகளும் ஒருபோதும் தலைவணங்க மாட்டார்கள்.

சனாதனத்தை அழிக்கிறேன் என்று மாலிகாபூர் அவுரங்கசீப் கஜினி முகம்மது என்று எத்தனையோ கொடுங்கோலர்கள் வாளேந்தி வந்தார்கள். சனாதனிகளை அழித்து அன்பு மதத்தை நிலை நிறுத்துவேன் என்று ராபர்ட் கிளைவ் முதல் மவுன்ட் பேட்டன் வரை எத்தனையோ பேர் நயமான வார்த்தைகளைக் கொண்டு பாசாங்கு பேசினார்கள். ஆனால் தனது சனாதன தர்மத்தின் ஆழம் உணர்ந்த அதனோடு ஆத்ம பந்தம் கொண்ட சனாதனிகள் இஸ்லாமிய கொள்ளையர்களின் வாளையும் கடந்து கிறிஸ்தவ வெள்ளையர்களின் நயவஞ்சகத்தையும் கடந்து மங்கல அடையாளத்தோடு மனதில் சனாதன தர்மத்தை ஏந்தி இன்றளவும் சனாதனிகளாவே வாழ்ந்து வருகிறார்கள். அவர்களை அழிக்க நினைத்த நாடுகள் எல்லாம் இன்று சனாதன தினம் கொண்டாட தொடங்கி வருகிறது . வாள் முனையில் வீழ்த்துவேன் என்று வந்தவன் எல்லாம் இன்று சனாதனத்திடம் தஞ்சம் கேட்டு நிற்கிறான்.

இவ்வளவையும் கண்முன்னே பார்த்த பிறகும் ஆண்டி முத்து ராசாவும் சனாதனத்தை அழிப்போம் ஒழிப்போம் என்று இறங்குவார்களே ஆனால் அது சனாதனத்தின் அழிவு அல்ல. சனாதனத்தின் தர்மக் கடலை தாக்கு பிடிக்க முடியாமல் அதை எதிர்க்கிறேன் என்று அதன் விழுந்து விட்டில் பூச்சிகளாக மடிய போகும் அறிவிலிகளின் அழிவாகவே இருக்கும். தன்னுள் வரும் அனைத்தையும் தன் வசமாக்கும் பவித்திரமான அக்னியைப் போல சனாதனம் அண்டி வரும் அனைத்தையும் தனதாக்கி என்றைக்கும் நிலையாக பூமியில் வாழ்ந்து பிரபஞ்சத்தை வாழ்விக்கும்.


Share it if you like it