10 நாட்களில் உயிரிழப்பேன்… 3-வது நாளில் உயிர்த்தெழுவேன்… பாதிரியார் அட்டூழியம்!

10 நாட்களில் உயிரிழப்பேன்… 3-வது நாளில் உயிர்த்தெழுவேன்… பாதிரியார் அட்டூழியம்!

Share it if you like it

இன்னும் 10 நாளில் உயிரிழப்பேன், இயேசுவைப் போலவே 3-வது நாளில் உயிர்த்தெழுவேன் என்று கூறிவரும் ஆந்திராவைச் சேர்ந்த பாதிரியாரை பரிதாபமாக பார்க்கிறார்கள் அப்பகுதி மக்கள்.

ஒரு குறிப்பிட்ட பிரிவைச் சேர்ந்த கிறிஸ்தவ பாதிரியார்களை பொறுத்தவரை, குருடனுக்கு கண் பார்வை வரவழைப்பது, முடவனை நடக்க வைப்பது, ஊமையை பேசவைப்பது, கேன்சர் வியாதியை சி.டி.யை வைத்தே குணப்படுத்துவது, குழந்தை இல்லாத பெண்களுக்கு ஜெபத்தின் மூலம் கர்ப்பத்தை உண்டாக்குவது என்று மக்களை முட்டாளாக்கி, மூட நம்பிக்கையில் மூழ்க வைப்பதை வாடிக்கையாக வைத்திருக்கிறார்கள். இதுபோன்ற பாதிரியார்களின் பித்தலாட்டங்களை அப்பட்டமாக தோலுரித்துக் காட்டியது மலையாளத்தில் ட்ரான்ஸ், தமிழில் நிலைமறந்தவன் என்கிற பெயரில் வெளியான திரைப்படம். ஆனாலும், மக்கள் திருந்தியபாடில்லை. இதுபோன்ற பாதிரியார்கள் இன்னும் நம்பிக் கொண்டு முட்டாள்களாகவே இருந்து வருகிறார்கள்.

இந்த நிலையில்தான், 10 நாளில் உயிரிழப்பேன், இயேசுவைப் போல 3-வது நாளில் உயிர்தெழுவேன் என்று சொல்லி மக்களை முட்டாளாக்கி, மூடநம்பிக்கையை விதைத்து வருகிறார் கிறிஸ்தவ பாதிரியார் ஒருவர். ஆந்திர மாநிலம் கிருஷ்ணா மாவட்டம் கண்ணவரம் அருகே உள்ளது கொல்லனபள்ளி கிராமம். இங்கு கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு சிறிய அளவிலான கிறிஸ்தவ சர்ச் ஒன்று கட்டப்பட்டது. இந்த சர்ச்சின் பாதிரியாராக இருந்து வருபவர் நாகபூஷனம். இவர்தான், நான் இன்னும் 10 நாட்களில் உயிரிழந்து விடுவேன். பின்னர், இயேசு கிறிஸ்துவைப் போலவே 3-வது நாளில் மீண்டும் உயிர்த்தெழுவேன் என்று கூறிவருகிறாராம். அதுமட்டுமல்ல, தனக்குச் சொந்தமான நிலத்தில் சமாதி கட்டுவதற்கு குழி ஒன்றையும் தோண்டி வைத்திருக்கிறார். மேலும், அந்த குழிக்கு அருகில் தான் இறந்து விட்டது போன்ற பிளக்ஸ் பேனர் ஒன்றையும் நாகபூஷனம் வைத்திருக்கிறார்.

இவரது செயல்பாடுகளை பார்த்த அவரது குடும்பத்தினர் செய்வதறியாது தவித்து வருகின்றனர். அதேசமயம், ஒருவேளை மனநலம் பாதிக்கப்பட்டிருக்குமோ என்ற குழப்பத்திலும் இருக்கிறார்ள். இது தொடர்பாக, அவரிடம் குடும்பத்தினர் பேசியதற்கு, “இன்னும் 10 நாளில் நான் உயிரிழந்து விடுவேன். ஆனால், யாரும் கவலைப்பட வேண்டாம். இயேசு கிறிஸ்துவைப் போலவே, அடுத்த 3-வது நாளில் உயிர்த்தெழுந்து வந்து விடுவேன்” என்று விடாப்பிடியாக கூறியிருக்கிறார். இந்த நவீன யுகத்திலும் இப்படியொரு மூடநம்பிக்கையா என்று அப்பகுதி மக்கள் பரபரப்பாக பேசி வருகின்றனர். மேலும், பாதிரியார் ஏதாவது செய்துகொள்வதற்கு முன்பு, அவரை ஒரு மனநல மருத்துவமனையில் சேர்க்க வேண்டும் அல்லது போலீஸார் கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர்.


Share it if you like it