தி.மு.க. அமைச்சர் குற்றச்சாட்டு…  அண்ணாமலை அதிரடி விளக்கம்!

தி.மு.க. அமைச்சர் குற்றச்சாட்டு… அண்ணாமலை அதிரடி விளக்கம்!

Share it if you like it

தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை அணிந்திருக்கும் கைகடிகாரம் குறித்து மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி வைத்த குற்றச்சாட்டிற்கு தனது தரப்பு விளக்கத்தை அவர் அளித்துள்ளார்.

ரஃபேல் வாட்ச் விவகாரம் குறித்து எழுந்த சர்ச்சைக்கு அண்ணாமலை தந்த விளக்கம் இதோ;

பா.ஜ.க மாநில தலைவராக தேர்வு செய்யப்படும் முன்பே ரபேல் கடிகாரத்தை வாங்கிவிட்டேன். கைக்கடிகாரம் வாங்கியதற்கான ரசீதுகள் அனைத்தும் என்னிடம் உள்ளன. கடந்த 10 வருடங்களுக்கான எனது வங்கி பரிவர்த்தனைகள் ஒரு லட்சத்திற்கு மேலான அசையா சொத்து விவரங்கள், ஆடு, மாடு விவரங்களையும் கூட நான் வெளியிட தயாராக உள்ளேன்.

ஒரு பைசாவுக்கு கூடுதலாக நான் சொத்து சேர்த்ததை நிரூபித்தால் எனது சொத்து முழுவதையும் அரசிடம் வழங்க தயார். தமிழக சகோதர, சகோதரிகள் முன்னிலையில் சொத்து விவரங்களை தி.மு.க. தலைவர்கள் வெளியிட தயாரா? என்று கூறியிருக்கிறார்.

இப்படிப்பட்ட சூழலில் தான், அமைச்சர் செந்தில் பாலாஜியிடம் முரசொலி அலுவலகத்தின் மூலபத்திரம் எங்கே? என நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.


Share it if you like it