உ.பிஸ். நிருபருக்கு அண்ணாமலை நோஸ் கட்!

உ.பிஸ். நிருபருக்கு அண்ணாமலை நோஸ் கட்!

Share it if you like it

கோபாலபுர ஊடகத்தைச் சேர்ந்த பத்திரிகையாளர் ஒருவர் தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலையிடம் வாங்கிக் கட்டிக் கொண்ட சம்பவம்தான் லேட்டஸ்ட் டாபிக்! இதுகுறித்த காணொளி ஒன்று தற்பொழுது சமூக வலைத்தளங்களில் வைரலாகி, மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.

தமிழக பா.ஜ.க. தலைவராக அண்ணாமலை பொறுப்பேற்றுக் கொண்ட பிறகு, தி.மு.க.வின் தீவிர ஆதரவாளர்கள், ஆதரவு பத்திரிகையாளர்கள், நெறியாளர்கள் பா.ஜ.க. குறித்து ஒரு பொய்யான மாயத் தோற்றத்தை தமிழக மக்களிடம் திணிக்க தீவிரமாக முயன்று வருகின்றனர். ஆளும் கட்சியைச் சேர்ந்தவர்கள் நிகழ்த்தும் அட்டூழியங்கள், அடாவடிகள் குறித்தெல்லாம் செய்திகளை வெளியிடாமல், தவறு செய்யும் அரசியல்வாதிகள் பற்றி வாய் திறக்காமல். மத்திய அரசு, பா.ஜ.க., மோடி குறித்த பொய்ச் செய்திகளுக்கு அதிக முக்கியத்துவம் வழங்கி வருகின்றனர்.

இந்த நிலையில், நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் வெற்றிபெற வேண்டி பணம், பரிசு பொருட்கள், கொலுசு என ஆளும் கட்சியைச் சேர்ந்தவர்கள் மக்களிடம் விநியோகம் செய்து வருகின்றனர். இது குறித்தெல்லாம் கவலைப்படாமல் வழக்கம் போல பா.ஜ.க. தலைவரிடம் எடக்கு மடக்காக கேள்வி எழுப்பினார் கோபாலபுர ஊடகத்தின் நிருபர் ஒருவர். ஆனால், அவருக்கு அண்ணாமலை கொடுத்த நோஸ்கட்தான் சூப்பர். இப்படி அந்த நிருபர் அசிங்கப்பட்ட சம்பவம் நெட்டிசன்கள் மத்தியில் கடும் சிரிப்பலையை உருவாக்கி இருக்கிறது.


Share it if you like it