அமைச்சர் செந்தில் பாலாஜியை அமைச்சரவையில் இருந்து நீக்க வேண்டும் என பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை ஆளுநரிடம் மனு அளித்துள்ளார்.
சென்னை, கிண்டி ராஜ்பவனில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை சந்தித்தார். அவருடன், பா.ஜ.க. மூக்கிய நிர்வாகிகள் உடன் இருந்தனர். இந்த சந்திப்பின் சாராம்சம் இதுதான். விஷச்சாராய மரணம் குறித்து உரிய விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும். அமைச்சர் செந்தில் பாலாஜியை அமைச்சரவையில் இருந்து உடனே நீக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கை அடங்கிய மனுவை ஆளுநரிடம் பா.ஜ.க. தலைவர் வழங்கினார்.