2029 – ல் முதல்வர்… 2044 இந்திய பிரதமர்!

2029 – ல் முதல்வர்… 2044 இந்திய பிரதமர்!

Share it if you like it

தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை 2044-ல் இந்தியாவின் பிரதமராக இருப்பார் என கணித்திருக்கிறார். இந்த காணொளிதான் தற்போது வைரலாகி வருகிறது.

ருத்ர கரன் பர்தாப் இவர் ஒரு பிரபல ஜோதிடர். இவரது, கணிப்புகள் பெரும் பாலும் துள்ளியமாக நிகழ்ந்துள்ளன. உ.பி., உத்தரகாண்ட், கோவா உள்ளிட்ட மாநிலங்களில் பா.ஜ.க. வெற்றி பெறும் என கணித்து இருந்தார். அதேபோல மேற்கூறிய மாநிலங்களில் பா.ஜ.க. வெற்றி பெற்று இருந்து. ரஷ்யா- உக்ரைன் இடையே போர் நிகழும் வாய்ப்பு உள்ளது என்று கணித்து இருந்தார். அதனை மெய்ப்பிக்கும் வகையில், இருநாடுகள் மத்தியில் இன்று வரை தீவிரமாக போர் நடைபெற்று வருகிறது.

இப்படிப்பட்ட சூழலில், தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலையின் எதிர்காலம் குறித்து ருத்ர கரன் பர்தாப் இவ்வாறு கணித்து இருக்கிறார் : எதிர்வரும், 2026 தமிழக சட்டமன்ற தேர்தலில் பா.ஜ.க.வை எதிர்க்கட்சி அந்தஸ்துக்கு அண்ணாமலை அழைத்து செல்வார். 2029 – 2031 காலகட்டத்தில் தமிழகத்தில் பா.ஜ.க.வின் ஆட்சியை கொண்டு வருவார். எதிர்வரும் 2024 நாடாளுமன்ற தேர்தலில் அண்ணாமலை தலைமையில் பா.ஜ.க. சிறப்பான வெற்றியை பெறும் என்று கடந்த சில மாதங்களுக்கு முன்பு கணித்திருந்தார்.

இப்படிப்பட்ட சூழ்நிலையில் தான், பிரபல அரசியல் விமர்சகர், எழுத்தாளர், சொற்பொழிவாளர் என பன்முக தன்மை கொண்டவர் டாக்டர். ஆனந்த் ரங்கநாதன். இவர்தான், 2044 – 2046-ல் பா.ஜ.க.வின் பிரதமராக அண்ணாமலை இருப்பார் என தனது எண்ணத்தை வெளிப்படுத்தி இருக்கிறார்.

Image
Image

Share it if you like it