பா.ஜ.க. தலைவர் கொளுத்தி போட்ட சரவெடி!

பா.ஜ.க. தலைவர் கொளுத்தி போட்ட சரவெடி!

Share it if you like it

இந்த தீபாவளிக்கு மக்கள் அனைவரும் நிறைய பட்டாசு வெடிக்க வேண்டும் என தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை வேண்டுகோள் விடுத்து இருக்கிறார்.

தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை பத்திரிகையாளர்களை சந்தித்த போது இவ்வாறு கூறினார் ;

தமிழகத்தை சேர்ந்த சகோதர, சகோதரிகளுக்கு இனிய தீபாவளி நல்வாழ்த்துகள். மன அமைதியை இந்த தீபாவளி கொடுக்கட்டும். உங்களுக்கு, அற்புதமான தீபாவளியாக இது இருக்கட்டும். நிறைய பட்டாசு வெடிங்க. சிவகாசி நண்பர்கள் மிகுந்த கஷ்டப்படுகிறார்கள். பட்டாசு தொழிலை நம்பி 8 லட்சம் பேர் வாழ்ந்து வருகிறார்கள். ஆகவே, நிறைய பட்டாசு வாங்கி வெடியுங்கள். பட்டாசு வெடிப்பது என்பது நமது கலாச்சாரம். ஒரு நாள் பட்டாசு வெடிப்பதால் காற்று மாசு ஏற்படாது. சிவகாசி வாழ வேண்டும். தமிழகம் வாழ வேண்டும். இந்தியாவில் விற்பனை ஆகும் 95% பட்டாசுகள் தமிழகத்தை சேர்ந்தவை. ஆகவே, நிறைய பட்டாசு வெடிங்க என அண்ணாமலை தமிழக மக்களுக்கு வேண்டுகோள் விடுத்து இருக்கிறார்.


Share it if you like it