சட்டத்துறை அமைச்சர் படிக்க சொன்ன புத்தகம்!

சட்டத்துறை அமைச்சர் படிக்க சொன்ன புத்தகம்!

Share it if you like it

தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை எழுதிய புத்தகத்தை அனைவரும் படிக்க வேண்டும் என சட்டத்துறை அமைச்சர் கிரென் ரிஜிஜு தெரிவித்துள்ளார்

தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ண்ணாமலை. இவர், கர்நாடக மாநிலத்தில், ஐ.பி.எஸ்., அதிகாரியாக பணியாற்றி போது கிடைத்த அனுபவங்கள், எதிர்கொண்ட சவால்கள், கடுமையான சூழ்நிலை உள்ளிட்டவற்றை மையமாக வைத்து எழுதிய புத்தகம் தான் காக்கி. இந்த, புத்தகத்தை கடந்த 2021- ஆண்டு வெளியிட்டு இருந்தார்.

இந்த புத்தகம் குறித்து மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜூ தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்ட பதிவு இதோ ; அனைவரும் கட்டாயம் படிக்க வேண்டிய புத்தகம். இதில், பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை தன் பணிக்காலத்தில் எதிர்நோக்கிய சவால்கள் குறித்து அழகாக எழுதியுள்ளார். இது அதிகம் ஊக்கம் அளிக்கும் வகையில் உள்ளது என தெரிவித்துள்ளார்


Share it if you like it