தி.மு.க.வின் அராஜகம்; அண்ணாமலை கடும்  கண்டனம்!

தி.மு.க.வின் அராஜகம்; அண்ணாமலை கடும் கண்டனம்!

Share it if you like it

தமிழக பா.ஜ.க. மூத்த தலைவர் செல்வகுமார். இவர், இன்று அதிகாலை கைது செய்யப்பட்டு இருக்கிறார். இச்சம்பவத்திற்கு, அண்ணாமலை தனது கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து, அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், தமிழக பா.ஜ.க. தொழில்துறை பிரிவு மாநிலத் துணைத் தலைவர் திரு. செல்வகுமார் அவர்களைக் கைது செய்துள்ள அறிவாலய அரசை வன்மையாகக் கண்டிக்கிறேன். ஆளுங்கட்சியின் தவறுகளுக்கு எதிராகக் குரல் கொடுப்பவர்களைக் கைது செய்வதன் மூலம் ஆளுங்கட்சிக்கு எதிரான குரல்களை அடக்கி, கருத்துச் சுதந்திரத்தை முடக்கி விடலாம் என்று கனவு காண்கிறது திறனற்ற திமுக அரசு. இதற்கெல்லாம், அஞ்சுபவர்களில்லை பா.ஜ.க. தொண்டர்கள் என குறிப்பிட்டுள்ளார்.


Share it if you like it