அ.மலையை குறைத்து மதிப்பிடாதீர்கள்: களத்தில் ஒற்றை ஆளாக நின்று சம்பவம் செய்கிறார் – மணி கதறல்!

அ.மலையை குறைத்து மதிப்பிடாதீர்கள்: களத்தில் ஒற்றை ஆளாக நின்று சம்பவம் செய்கிறார் – மணி கதறல்!

Share it if you like it

அண்ணாமலையை கண்டு தி.மு.க. ஆதரவு பத்திரிகையாளர் மணி அலறி இருக்கும் காணொளி ஒன்று தற்போது வைரலாகி வருகிறது.

மூத்த பத்திரிகையாளர் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சியின் தீவிர ஆதரவாளராக இருப்பவர் மணி. இவர், திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைவர்களுடன் மிக நெருக்கமான தொடர்பு கொண்டவர். பாரதப் பிரதமர் மோடி, மத்திய அரசு மற்றும் பா.ஜ.க.வை விமர்சனம் செய்வதையே வழக்கமாக கொண்டவர். இப்படிப்பட்ட சூழலில், தி டிபேட் இணையதள ஊடகத்திற்கு அளித்த பேட்டியில் அவர் இவ்வாறு கூறியுள்ளார் :

அண்ணாமலையை சாதாரணமாக நினைக்க வேண்டாம். அவரை, உங்களுக்கு பிடிக்கிறதோ இல்லையோ அண்ணாமலை ஒரு பெரிய கட்சியின் மாநில தலைவர். அவர், ஒரு போன் செய்தால் எந்த ஒரு அதிகாரியும் பேசிதான் ஆக வேண்டும். டி.ஜி.பி.யோ, தலைமை செயலாளரோ அவரை புறக்கணிக்க முடியாது. அண்ணாமலை என்ன பேசுவார் என்பதை உயர் அதிகாரிகள் உன்னிப்பாக கவனித்து வருகிறார்கள். அரசு அதிகாரிகள் எல்லாம் வயிற்றில் நெருப்பை கட்டி கொண்டு இருக்கிறார்கள் என தி.மு.க. ஆதரவு பத்திரிகையாளர் மணி அக்காணொளியில் அலறி இருக்கிறார்.

மேலும், விவரங்களுக்கு அதன் லிங்க கீழே கொடுக்கப்பட்டுள்ளது.


Share it if you like it