பா.ஜ.க தலைவரின் பிறப்பை விமர்சனம் செய்த தி.மு.க நிர்வாகி!

பா.ஜ.க தலைவரின் பிறப்பை விமர்சனம் செய்த தி.மு.க நிர்வாகி!

Share it if you like it

பா.ஜ.க தலைவருக்கு தி.மு.க நிர்வாகி வி.பி கலைராஜன் கொலை மிரட்டல் விடுத்து இருக்கும் சம்பவம் பா.ஜ.க தொண்டர்கள் மத்தியில் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

ஊரகத் தொழில்துறை அமைச்சராக இருப்பவர் தா.மோ. அன்பரசன். இவர், சில தினங்களுக்கு முன்பு தி.மு.க சார்பில் நடைபெற்ற பொதுக்கூட்டம் ஒன்றில் கலந்து கொண்டார். இதையடுத்து அவர் பேசியபொழுது, அண்ணாமலை ஒரு பொறுக்கி. ஐ.பி.எஸ் ஆக இருந்த போது ரவுடிகளை சிறையில் அடைத்தவர். தற்போது, ரவுடிகளை கட்சியில் சேர்த்து வருகிறார் என தான் ஒரு அமைச்சர் என்பதையும் மறந்து விட்டு மூன்றாம் தர பேச்சாளர் போல விமர்சனம் செய்து இருந்தார். இதற்கு, பா.ஜ.க தொண்டர்கள் உட்பட பல சமூக ஆர்வலர்கள் கடும் கண்டனம் தெரிவித்து இருந்தனர்.

இதையடுத்து, பாரதப் பிரதமர் மோடியின் 8 ஆண்டு சாதனை விளக்க பொதுக் கூட்டம் பா.ஜ.க தலைவர் அண்ணாமலையின் தலைமையில் திருச்சியில் நடைபெற்றது. இதையடுத்து பேசிய அண்ணாமலை, நான் ஒரு பொறுக்கி தான் எப்படிப்பட்ட பொறுக்கி தி.மு.க.வின் ஊழலை பொறுக்க கூடிய மனிதன், தி.மு.க.வின் அராஜகத்தை பொறுக்க கூடிய மனிதன், நீங்கள் செய்ய கூடிய தவறுகளை பொறுக்கி பொறுக்கி மக்கள் மன்றத்தில் வைக்கின்றேன் என அமைச்சருக்கு மரண பதிலடியை கொடுத்து இருந்தார்.

இந்நிலையில், தி.மு.க.வின் மூத்த தலைவர்களில் ஒருவரும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான வி.பி. கலைராஜன் குன்றத்தூரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில், அண்ணாமலை பார்த்து நீ ஒரு குறை பிரசவத்தில் பிறந்தவன். நீ ஒரு குதர்க்கவாதி அரைவேக்காடு என விமர்சனம் செய்துள்ளார். இதுதவிர, கர்நாடகாவில் காவல்துறையில் பணியாற்றி விட்டு இங்கே வந்து தினமும் ஏதோ பேசிக்கொண்டு இருக்கிறாய் என கடுமையான வார்த்தைகளை பயன்படுத்தியுள்ளார்.

அதன் லிங்க் இதோ.

இதனிடையே, அண்ணாமலை நாங்கள் எல்லாம் எமனுக்கே எருமையை சப்ளை செய்பவர்கள் இதோடு உன் பேச்சை நிறுத்திக் கொள் என உதயநிதி ஸ்டாலினின் ஆதரவாளர் ஒருவர் பா.ஜ.க தலைவரை விமர்சனம் செய்து அண்மையில் காணொளி ஒன்றினை வெளியிட்டு இருந்தார். அந்தவகையில், பா.ஜ.க தலைவருக்கு தி.மு.க நிர்வாகி வி.பி கலைராஜன் கொலை மிரட்டல் விடுத்து இருக்கும் சம்பவம் பொதுமக்கள் மத்தியில் மீண்டும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

பா.ஜ.க தலைவர் எழுப்பும் கேள்விகளுக்கு பதில் அளிக்க முடியாமல் விடியல் அரசு தனது கட்சியை சேர்ந்த இரண்டாவது லேயர்களை களத்தில் இறக்கி விட்டு இருப்பது தற்பொழுது வெளிச்சத்திற்கு வந்துள்ளது என பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை தி.மு.க.வை வெங்காய லேயர்களோடு ஒப்பிட்டு பேசியதாவது;

திராவிட மாடல் என்றால் என்ன என்று கேட்டால் இருபது விதமான பதிலை கொடுக்கிறார் முதல்வர் ஸ்டாலின். இதை அவர் பரிட்சையில் ஒரு கேள்விக்கு ஒரு மாணவனாக எழுதியிருந்தால் மதிப்பெண்ணே பெற்றிருக்க மாட்டார். தி.மு.க.வை வீழ்த்துவது மிக எளிது. அது சக்கரவியூஹம் போல. வெளியே ஒரு மீடியா மற்றும் ஆங்கில புலமை கொண்ட ஒரு வெளிப்புற லேயர். அதை நாம் பெரிய வெங்காயத்தை உரிப்பது போல் உரித்து உள்ளே சென்றால் அங்கு அட்டாக் லேயர் இருக்கும். இவர்களிடம் நாம் அறிவார்ந்து ஏதாவது பேசினால் கெட்ட வார்த்தைகளில் பேசுவார்கள். நம்மை வசைப்பாடி அடக்கப் பார்ப்பார்கள்.

இந்த அட்டாக் லேயரை மீண்டும் பெரிய வெங்காயத்தை உரிப்பது போல் உரித்து சென்றால் அங்கு குறுநில மன்னர்கள் லேயர் இருக்கும். இவர்களை முதல் இரண்டு லேயர்களும் எப்போதும் பாதுகாத்து கொண்டு இருக்கும். இவர்கள் வசம் பல ஏரியாக்கள் தலைமுறை தலைமுறையாக பிரித்து கொடுக்கப்பட்டிருக்கும். இவர்களுக்கு ஒரு விஷயத்தையும் சுயமாக செய்யும் ஆற்றல் இருக்காது.

ஒரு விமானம் பிடித்து தில்லிக்கு தனியாக சென்று வர கூட இயலாதவர்கள். இந்த லேயரையும் நாம் அதே பெரிய வெங்காயத்தை உரிப்பது போல் உரித்துக் கொண்டு சென்றால், உள்ளே குடும்ப லேயர் இருக்கும். இந்த குடும்ப லேயரிடம் தான் அனைத்து ஆளுமையும் இருக்கும். அதையும் நாம் பெரிய வெங்காயத்தை உரிப்பது போல் உரித்தால், உள்ளே கோபாலபுரம் லேயர் இருக்கும். முதல் நான்கு லேயர்களையும் உரித்து போட்டு விட்டால், இந்த கோபாலபுரம் லேயரை எளிதில் வீழ்த்தி விடலாம். வெங்காயத்தில் உள்ளே எதுவுமே இல்லை என்பது போல் இந்த கோபாலபுர லேயரில் எந்த சரக்கும் இல்லை என்று குறிப்பிட்டுள்ளார்.


Share it if you like it