அண்ணாமலையின் அசுர வளர்ச்சி: அலறிய கம்யூ. பத்திரிகையாளர்..!

அண்ணாமலையின் அசுர வளர்ச்சி: அலறிய கம்யூ. பத்திரிகையாளர்..!

Share it if you like it

பா.ஜ.க.வை அண்ணாமலை சிறந்த முறையில் வழிநடத்திச் செல்வதாக மாற்றுக் கட்சியைச் சேர்ந்த தலைவர்கள் கூறிவரும் நிலையில், கம்யூனிஸ்ட் கட்சியின் தீவிர ஆதரவாளர் என்று கூறப்படும் மூத்த பத்திரிகையாளர் மணி, தமிழக பா.ஜ.க. மற்றும் அண்ணாமலை குறித்து அலறிய காணொளி தற்பொழுது சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.

தமிழக இளைஞர்கள் மத்தியில் பா.ஜ.க. தலைவர் அண்ணாமலைக்கு நாளுக்கு நாள் ஆதரவு பெருகி வருகிறது. இதை பொறுக்க முடியாமல், ஆளும் கட்சியைச் சேர்ந்தவர்கள் மட்டுமல்லாமல், தி.மு.க.வின் ஆசிபெற்ற சவுக்கு சங்கர், நெறியாளர் செந்தில் வரை தமிழக பா.ஜ.க. குறித்தும், அண்ணாமலை குறித்தும் தொடர்ந்து அவதூறு பதிவுகளை தங்களது ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்து வருகின்றனர் என்பது அனைவரும் அறிந்ததே.

தி.மு.க. தலைவரும், தமிழக முதல்வருமான ஸ்டாலினின் மகன் உதயநிதிக்கு போட்டியாக, எதிர்காலத்தில் பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை பெரும் தடையாக மாறி விடக் கூடாது என்ற ஒற்றை காரணத்திற்காக பா.ஜ.க.வின் வளர்ச்சியை தடுக்கும் விதமாக சன் நியூஸ், கலைஞர் டி.வி., போன்ற ஊடகங்கள் பொய் செய்திகளை பரப்பி வருகின்றன. இந்த நிலையில்தான், கம்யூனிஸ்ட் கட்சியின் தீவிர ஆதரவாளர் என்று கூறப்படும் மூத்த பத்திரிக்கையாளர் மணி, தமிழக பா.ஜ.க. மற்றும் அண்ணாமலை குறித்து இணையதள ஊடகம் ஒன்றில் அலறி இருக்கும் காணொளி தற்பொழுது வைரலாகி வருகிறது.

/

Share it if you like it