பத்திரிகையாளர்களை விடாதீர்கள்… நிர்வாகிக்கு கட்டளையிட்ட அண்ணா!

பத்திரிகையாளர்களை விடாதீர்கள்… நிர்வாகிக்கு கட்டளையிட்ட அண்ணா!

Share it if you like it

பத்திரிகையாளர்களை சாப்பிடாமல் வெளியே அனுப்பாதீர்கள் என தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை தனது கட்சி நிர்வாகிக்கு கட்டளையிட்ட காணொளி தற்போது வைரலாகி வருகிறது.

தமிழக அரசியல்வாதிகளில் பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை மிகவும் வித்தியாசமான மனிதர். மற்ற தலைவர்களிடம் நெருங்கி உரையாற்ற முடியாது. ஆனால், அண்ணாமலை மற்றவர்களை தேடி சென்று நலம் விசாரிக்க கூடியவர். இவரது, பணிவு, அடக்கம், அன்பு அனைவரையும் ஈர்த்துள்ளது. இதன் காரணமாக, மாற்று கட்சியை சேர்ந்த தொண்டர்கள் கூட அண்ணாமலையை விரும்புகின்றனர். இதனிடையே, சூப்பர் ஸ்டார் ரஜினிக்காந்தின் தீவிர ரசிகராக இருந்தவர் முருகன். இன்று அண்ணாமலையின் பக்தராகவே மாறி இருக்கிறார் என்று கூட சொல்லலாம்.

அண்ணாமலை பிறந்த நாள்: இலவசமாக ஆட்டோ ஓட்டும் முன்னாள் ரஜினி ரசிகர் – News18  Tamil
ரஜினி அரசியலுக்கு வராததால் வெறுப்பு அடைந்த ரஜினி முருகன் அண்ணாமலையின் ரசிகராக மாறி அவர் பெயரில் அண்ணாமலை மக்கள் மன்றம் என்ற ஒரு இயக்கத்தையும் தொடங்கி நடத்தி வருகிறார்

இப்படியாக, அண்ணாமலையின் புகழ் நாளுக்கு நாள் தமிழகத்தில் உயர்ந்த வண்ணம் உள்ளது. மேலும், தமிழக மக்கள் மனதிலும் சிறப்பான இடத்தைப் பிடித்துள்ளார். இவரது, செயல்பாடுகளைப் பார்த்த வியந்துபோன தமிழக இளைஞர்கள் பா.ஜ.க.வில் ஐக்கியமாகி வருகின்றனர். குறிப்பிட்டு சொல்ல வேண்டுமானால், சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அண்ணாமலையை தங்களது குடும்பத்தில் ஒருவராக பார்த்து வருகின்றனர். இதை மெய்ப்பிக்கும் வகையில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு தி.மு.க.வைச் சேர்ந்த ஒரு தொண்டரின் மகள் அண்ணாமலையை தேடி சென்று புகைப்படம் எடுத்துக் கொண்டார்.

Image

இப்படிப்பட்ட சூழலில், கட்சியின் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்ச்சியில் தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டார். இதையடுத்து, பத்திரிகையாளர்களை சந்தித்து அவர்களிடம் சிறிது நேரம் உரையாடி இருக்கிறார். அதனை தொடர்ந்து, அனைவரும் சாப்பிட்டு விட்டு தான் செல்ல வேண்டும் என்று தெரிவித்துள்ளார். மேலும், தனது கட்சி நிர்வாகியை அழைத்து, பத்திரிகையாளர்களை சாப்பிடாமல் வெளியே செல்ல அனுமதிக்காதீர்கள், என உரிமையுடன் பா.ஜ.க. தலைவர் பேசிய காணொளி தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.


Share it if you like it