கம்யூனிச கட்சியின் மூத்த தலைவரின் மறைவிற்கு இரங்கல் தெரிவித்த அண்ணாமலை !

கம்யூனிச கட்சியின் மூத்த தலைவரின் மறைவிற்கு இரங்கல் தெரிவித்த அண்ணாமலை !

Share it if you like it

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் திரு.சங்கரய்யா அவர்கள் இன்று காலமானார். அவரது மறைவுக்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை இரங்கல் தெரிவித்து சமூக வலைத்தளத்தில் பின்வருமாறு பதிவிட்டுள்ளார் :-

முதுபெரும் அரசியல் தலைவரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நிறுவனர்களில் ஒருவருமான திரு. சங்கரய்யா அவர்கள் காலமானார் என்ற செய்தியறிந்து மிகுந்த வருத்தமடைகிறேன். மூத்த தலைவரான திரு. சங்கரய்யா அவர்களது மறைவு, தமிழக அரசியலுக்கு பேரிழப்பு.

திரு. சங்கரய்யா அவர்களின் குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் தமிழக பாஜக சார்பாக ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். ஓம் சாந்தி.


Share it if you like it