அமைச்சருக்கு மகாராணி என்ற நினைப்பா?

அமைச்சருக்கு மகாராணி என்ற நினைப்பா?

Share it if you like it

அமைச்சர் கீதா ஜீவன் வருகையையொட்டி பா.ஜ.க. நிர்வாகிகளை தமிழக காவல்துறை கைது செய்து இருப்பது அக்கட்சி தொண்டர்கள் மத்தியில் பெரும் புயலை கிளப்பி விட்டிருக்கிறது.

தி.மு.க. மூத்த தலைவர் மற்றும் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை அமைச்சராக இருப்பவர் கீதா ஜீவன். இவர், தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் நகர தி.மு.க.வின் சார்பில் பேராசிரியர் அன்பழகனின் நூற்றாண்டு நிறைவு விழா பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசும் போது, ’அண்ணாமலையை’ ஒருமையில் விமர்சனம் செய்து பேசினார். பா.ஜ.க. தலைவர் பேசி கொண்டு இருக்கும் மேடையில் நாங்கள் ஏறுவோம் என எச்சரிக்கை விடுத்திருந்தார்.

அமைச்சரின் அருவருக்கதக்க பேச்சிற்கு, தமிழக பா.ஜ.க. மூத்த தலைவர்களான நாராயணன் திருப்பதி மற்றும் சசிகலா புஷ்பா உள்ளிட்டவர்கள் தங்களது கடும் கண்டனத்தை தெரிவித்து இருந்தனர்.

இதையடுத்து, தி.மு.க.வை சேர்ந்த இரு கவுன்சிலர்கள் மற்றும் அக்கட்சியை சேர்ந்த குண்டர்கள் சசிகலா புஷ்பாவின் வீட்டின் மீது திடீர் தாக்குதல்களை நடத்தினர். இந்த தாக்குதலில், அதிர்ஷ்டவசமாக அவர் உயிர் தப்பினார். இதையடுத்து, தி.மு.க. மற்றும் பா.ஜ.க. தொண்டர்கள் மத்தியில் மோதல் போக்கு ஏற்படும் அபாயம் நிலவி வருகிறது.

இப்படிப்பட்ட சூழலில், தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை தனது ட்விட்டர் பக்கத்தில் இவ்வாறு பதிவிட்டுள்ளார் ;

திருநெல்வேலி மாவட்டம் மானூர் ஒன்றியத்திற்கு அமைச்சர் கீதா ஜீவன் வரவுள்ளதால், முன்னெச்சரிக்கை என்ற பெயரில் திருநெல்வேலி வடக்கு மாவட்டத் தலைவர் தயா சங்கர் மற்றும் மானூர் ஒன்றியத் தலைவர் சுப்புத்துரை ஆகியோரை இன்று அதிகாலையில் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

அமைச்சர் கீதா ஜீவனுக்கு மகாராணி என்ற நினைப்பா? தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு சர்வாதிகாரி என்ற நினைப்பா? உங்கள் அடக்குமுறைகளை மக்கள் பார்த்துக் கொண்டும் பொறுத்துக் கொண்டும் இருக்கிறார்கள் என்பதை நினைவில் கொண்டு செயல்படுங்கள் என குறிப்பிட்டுள்ளார்.


Share it if you like it