சொந்த கிராமத்தில் நடந்த கும்பாபிஷேகத்தில் கலந்துக்கொண்ட அண்ணாமலை !

சொந்த கிராமத்தில் நடந்த கும்பாபிஷேகத்தில் கலந்துக்கொண்ட அண்ணாமலை !

Share it if you like it

கரூர் மாவட்டத்தில் தன் சொந்த கிராமமான தொட்டம்பட்டியில் நடந்த கும்பாபிஷேக விழாவில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கலந்துக்கொண்டு சிறப்பித்துள்ளார். இதுதொடர்பாக அண்ணாமலை X பதிவில் குறிப்பிட்டிருப்பதாவது :-

இன்றைய தினம், கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி வட்டத்தில் உள்ள, எனது சொந்த கிராமமான சூ.தொட்டம்பட்டியில், முழுமுதற் கடவுளான அருள்மிகு ஸ்ரீ மஹாகணபதி ஆலயம் மற்றும் அருள்மிகு ஸ்ரீ பாலமுருக பழனியாண்டவர் திருக்கோவில் மஹாகும்பாபிஷேக விழாவில் கலந்து கொண்டதைப் பெரும் பாக்கியமாகக் கருதுகிறேன்.

பக்தப் பெருமக்களின் நன்முயற்சியால், 12 ஆண்டுகளுக்குப் பிறகு முறையாக ஆலயத் திருப்பணிகள் செய்யப்பட்டு, இப்புனித கும்பாபிஷேகப் பெருவிழா நடைபெறுவது மகிழ்ச்சி அளிக்கிறது.

பொதுமக்கள் அனைவரும் நலமுடன், மகிழ்ச்சியுடனும், சகோதரத்துவத்துடனும் வாழ இறைவனை வேண்டிக் கொண்டேன்.


Share it if you like it