காவல்துறையில் தான் பணியாற்றிய சமயத்தில் மறைந்த முன்னாள் மத்திய அமைச்சர் செய்த உதவி பற்றி நினைவுகூர்ந்த அண்ணாமலை .
கர்நாடகாவில் இருந்து தப்பி, அயல் நாட்டில் பதுங்கி கொண்ட, மிகப் பெரிய குற்றவாளியை மீண்டும், இந்தியாவிற்கு அழைத்து வர கடும் முயற்சிகளை மேற்கொண்டோம். ஆனால் அந்நாட்டின் கடுமையான சட்ட, திட்டங்கள் மற்றும் சட்ட சிக்கல்களை நாங்கள் எதிர்கொள்ள வேண்டி இருந்தது. அதனை தொடர்ந்து இந்திய வெளியுறவுத்துறை, அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜை சந்தித்து. இந்த வழக்கின் தன்மையை குறித்து அவரிடம் விளக்கி கூறினோம். உடனே அவர் மொரோக்கோ நாட்டு தூதரிடம் தொலைபேசியில் பேசி குற்றவாளியை இந்தியா அழைத்து வர பெரும் உதவி செய்தார் என்று அண்ணாமலை கூறியுள்ளார்.