விவசாயிகளின் பாதங்களுக்கு “பாத பூஜை” செய்து, காலில் விழுந்து ஆசீர்வாதம் பெற்ற அண்ணாமலை !

விவசாயிகளின் பாதங்களுக்கு “பாத பூஜை” செய்து, காலில் விழுந்து ஆசீர்வாதம் பெற்ற அண்ணாமலை !

Share it if you like it

ராணிப்பேட்டையில் என் மண் என் மக்கள் பாதயாத்திரையின் போது பாஜக மாநில தலைவர் அண்ணாமலை விவசாய மக்களுக்கு பாத பூஜை செய்த நிகழ்வானது அனைவரையும் நெகிழ்ச்சிக்குள்ளாகியது. இதுதொடர்பாக அண்ணாமலை X பதிவில் குறிப்பிட்டிருப்பதாவது :-

ராணிப்பேட்டை மாவட்டத்தில் நமது #என் மண் என்மக்கள் பாதயாத்திரையின் போது தமிழகத்தின் கடின உழைப்பாளியான விவசாயிகளுக்கு “பாத பூஜை” செய்யும் வாய்ப்பு கிடைத்தது நிறைவாக இருந்தது.

உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்வோம் என்ற மகாகவியின் வாக்கிற்கிணங்க, ராணிப்பேட்டை மாவட்டத்தில் இன்றைய என் மண் என் மக்கள் பயணத்தின்போது, உலகிற்கெல்லாம் உணவளிக்கும் நமது விவசாயப் பெருமக்களைச் சந்தித்து, அவர்களுக்குப் “பாத பூஜை” செய்யும் பாக்கியம் கிடைத்ததைப் பெருமையாகக் கருதுகிறேன். இந்த வாய்ப்பை உருவாக்கித் தந்த தமிழக பாஜக விவசாய அணி மாநில தலைவர் திரு.ஜி.கே நாகராஜ் அவர்களுக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

விவசாயிகளின் பாதுகாவலனாக, உற்ற தோழனாக, பல்வேறு நலத்திட்டங்களைச் செயல்படுத்திவரும், நமது மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு.நரேந்திர மோடி அவர்கள், பாரதம் முழுவதும் உள்ள விவசாயிகளின் நல்வாழ்வுக்கு உறுதுணையாக என்றும் இருப்பார் என்ற நம்பிக்கையை, விவசாயப் பெருமக்களிடம் உணர முடிந்தது.


Share it if you like it