என் மண் என் மக்கள் யாத்திரையை திருப்பூர் குமரன் நினைவிடத்தில் நிறைவு செய்த அண்ணாமலை !

என் மண் என் மக்கள் யாத்திரையை திருப்பூர் குமரன் நினைவிடத்தில் நிறைவு செய்த அண்ணாமலை !

Share it if you like it

தமிழகம் முழுவதும் உள்ள 234 சட்டசபைத் தொகுதிகளுக்கும் பயணம் செய்து, 234 ஆவது சட்டமன்றத் தொகுதியாக, இன்றைய தினம், திருப்பூர் தெற்கு தொகுதியில், சுதந்திரப் போராட்ட வீரர் திருப்பூர் குமரன் அவர்கள் நினைவிடத்தில், அவரது திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து வணங்கி, நமது நமது என் மண் என் மக்கள் நடைபயணத்தினை நிறைவு செய்திருப்பதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை குறிப்பிட்டுள்ளார். இதுதொடர்பாக அண்ணாமலை X பதிவில் குறிப்பிட்டிருப்பதாவது :-

கடந்த 2023 ஜூலை மாதம், புண்ணிய பூமியான ராமேஸ்வரம் மண்ணில், மாண்புமிகு மத்திய உள்துறை அமைச்சர் திரு. அமித்ஷா அவர்களால் தொடங்கப்பட்டு, தமிழகம் முழுவதும் உள்ள 234 சட்டசபைத் தொகுதிகளுக்கும் பயணம் செய்து, 234 ஆவது சட்டமன்றத் தொகுதியாக, இன்றைய தினம், திருப்பூர் தெற்கு தொகுதியில், சுதந்திரப் போராட்ட வீரர் திருப்பூர் குமரன் அவர்கள் நினைவிடத்தில், அவரது திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து வணங்கி, நமது நமது என் மண் என் மக்கள் நடைபயணத்தினை நிறைவு செய்திருக்கிறோம்.

சுமார் 7 மாதங்களாக, தமிழகம் முழுவதும் மக்களோடு மக்களாகப் பயணித்ததில், தமிழக மக்கள் ஒரு மாபெரும் அரசியல் மாற்றத்தை விரும்புகிறார்கள், ஊழலற்ற அரசியலை எதிர்பார்க்கிறார்கள் என்பதைப் புரிந்து கொள்ள முடிகிறது. நமது மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு.நரேந்திர மோடி அவர்களின் நேர்மையான நல்லாட்சி, தமிழகத்திலும் அமையும் என்ற நம்பிக்கையை நம் தமிழக மக்கள் மனதில் ஏற்படுத்தியிருப்பதை உணர முடிகிறது.

நாளை நமதே!


Share it if you like it