அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ தி.நகர் சத்யா தேர்தலில் போட்டியிட்ட போது சொத்து கணக்குகளை மறைத்து காண்பித்ததாக புகார் எழுந்தது. மேலும் அவர் அதிமுக ஆட்சிக் காலத்தில் வருமானத்திற்கும் அதிமாக சொத்து சேர்த்தாதகவும் புகார் எழுந்தது. இது தொடர்பான வழக்கை இரண்டு மாதங்களுக்குள் முடிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த நிலையில் சென்னை உட்பட பல்வேறு பகுதிகளில் சத்யா வீடு உள்ளிட்ட இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். இதே போல் அதிமுக மாவட்ட செயலாளர் ராஜேஷ் வீடு உள்ளிட்ட இட ங்களிலும் சோதனை நடைபெற்று வருகிறது.