தி.மு.க. துணைபொதுச் செயலாளர் தாம் சிறைக்கு செல்ல போவதாக கூறியிருக்கும் சம்பவம் தி.மு.க.வினர் மத்தியில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
என்னுடைய பதவியை பறித்தாலும் பரவாயில்லை. அதானி, குற்றவாளிதான் இதை கூறியதற்காக என் மீது வழக்கு தொடர்ந்து எனக்கு தண்டனை வாங்கி கொடுத்தாலும், என்னுடைய எம்.பி. பதவியை பறித்தாலும் நான் சிறைக்குச் செல்ல தயாராகவே இருக்கிறேன் என தி.மு.க. எம்.பி. ஆ.ராசா அலறி இருக்கிறார். ஆ.ராசாவின் இந்த அலறல் 2ஜி-யில் தனது குட்டு வெளிப்பட்டு விடுமோ? என்ற அச்சத்தை காட்டுவதாக நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.