கோவில்களில் தமிழில் அர்ச்சனை – சர்ச்களிலும், மசூதிகளிலும், தமிழில் தான் பிராத்தனை செய்ய வேண்டுமென கூறாதது ஏன்? அவர்கள் தமிழர்களில்லையா? – தேவநாதன் யாதவ் காட்டம்..!

கோவில்களில் தமிழில் அர்ச்சனை – சர்ச்களிலும், மசூதிகளிலும், தமிழில் தான் பிராத்தனை செய்ய வேண்டுமென கூறாதது ஏன்? அவர்கள் தமிழர்களில்லையா? – தேவநாதன் யாதவ் காட்டம்..!

Share it if you like it

தி.மு.க ஆட்சிக்கு வந்த நாளில் இருந்து ஹிந்து மதம் சார்ந்த விஷயங்களில் அதிக கவனம் செலுத்தி வருகிறது இந்நிலையில் யாதவ மகா சபை நிறுவனர் மற்றும் வின்-டிவி நிர்வாக இயக்குனருமான தேவநாதன் யாதவ் அவர்கள் தி.மு.க அரசுக்கு இவ்வாறு கேள்வி எழுப்பியுள்ளார்.

இந்துக் கோவில்களில் தமிழில் அர்ச்சனை செய்யப்படும் என அமைச்சர் சேகர்பாபு தெரிவித்திருக்கிறார். இதேபோல் சர்ச்களிலும், மசூதிகளிலும் தமிழில்தான் பிராத்தனை செய்ய வேண்டுமென ஏன் அறிவிக்கவில்லை. அவர்கள் மட்டும் தமிழர்களில்லையா..? ஏன் இந்த ஓரவஞ்சனை..?

 

 


Share it if you like it