மோடி நல்லவர்… தி.மு.க.வை நம்பி மோசம் போய்விட்டோம்; சாமுவேல் குமுறல்!

மோடி நல்லவர்… தி.மு.க.வை நம்பி மோசம் போய்விட்டோம்; சாமுவேல் குமுறல்!

Share it if you like it

தி.மு.க. எங்களுக்கு கொடுத்த வாக்குறுதிகள் எதனையும் நிறைவேற்றவில்லை என பேராயர் குணசேகரன் சாமுவேல் பேசிய காணொளி ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

திராவிட முன்னேற்ற கழகம் எங்களுக்கு மிகவும் உறுதுணையாக இருக்கும் என நம்பினோம். ஆனால், நாங்கள் ஏமாற்றம் அடைந்தது மட்டுமே மிச்சம். பல்வேறு, வாக்குறுதிகளை கிறிஸ்தவர்களுக்கு தி.மு.க. வழங்கி இருந்தது. ஆனால், கொடுத்த வாக்குறுதிகள் எதனையும் அக்கட்சி நிறைவேற்றவில்லை. தேர்தல் நேரத்தில் அந்த கட்சிக்கு வாக்களிக்க வேண்டும் என கிறிஸ்தவர்களுக்கு கூறியிருந்தோம். இதையெல்லாம், இப்போது சிந்தித்து பார்க்கும் போது வேதனையாக இருக்கு என உருக்கமுடன் தெரிவித்து இருக்கிறார். அதன் லிங்க் இதோ.

இதனிடையே, கிறிஸ்தவ மக்களுக்கு எதிராக பாரதப் பிரதமர் மோடி செயல்படுகிறார் என திருமாவளன், எஸ்றா. சற்குணம் மற்றும் சில்லறை போராளிகள் தொடர்ந்து அவதூறு பரப்பி வருகின்றனர். இந்த நிலையில், பிரதமர் மோடி நல்லவர், அவர் கிறிஸ்தவ மக்களுக்கு எதிராக செயல்படவில்லை என பேராயர் குணசேகரன் சாமுவேல் முன்பு ஒரு பேட்டியில் தெரிவித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதனிடையே, தி.மு.க மற்றும் அதன் ஆசிபெற்ற ஊடகங்கள் மற்றும் கிறிஸ்தவ மிஷநரிகள் பா.ஜ.க.வை கிறிஸ்வர்களின் எதிரியாக சித்தரிக்க இன்று வரை தீவிரமாக செயல்பட்டு வருகின்றன என்பதே கசப்பான உண்மை.


Share it if you like it