அர்ஜுனா விருதை வென்ற சதுரங்க கிராண்ட் மாஸ்டர் வைஷாலி !

அர்ஜுனா விருதை வென்ற சதுரங்க கிராண்ட் மாஸ்டர் வைஷாலி !

Share it if you like it

விளையாட்டு துறையில் சிறந்து விளங்கும் வீரர்களுக்கு வழங்கப்படும் மத்திய அரசின் அர்ஜுனா விருதை பெற்ற தமிழக செஸ் வீராங்கனை வைஷாலி, சாகித்ய அகாடமி விருது பெற்ற தமிழக எழுத்தாளர் ராஜசேகரன் உள்ளிட்டோருக்கு தமிழக ஆளுநர், தெலங்கானா ஆளுநர் மற்றும் அரசியல்தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

இதுதொடர்பாக ஆளுநர் ஆர்.என்.ரவிஅவர்கள் வெளியிட்ட வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது:

நடப்பாண்டு சாகித்ய அகாடமி விருதைப் பெற்ற எழுத்தாளர் ராஜசேகரன் தேவிபாரதி, அர்ஜுனா விருதை வென்ற சதுரங்க கிராண்ட் மாஸ்டர் வைஷாலி, துரோணாச்சாரியர் விருதை பெற்ற ஆர்.பி.ரமேஷ் ஆகியோருக்கு மனமார்ந்த வாழ்த்துகள். மேலும், விளையாட்டுப் பிரிவுவாழ்நாள் சாதனைக்கான தியான்சந்த் விருதுக்கு தேர்வுசெய்யப்பட்ட இந்திய மகளிர் கபடி அணியின்பயிற்சியாளர் கவிதா செல்வராஜுக்கும் சிறப்பு வாழ்த்துகள்.


Share it if you like it