மக்கள் உரிமைகளை பறித்த 35-ஏ சட்டப்பிரிவு – உச்ச நீதிமன்றம்

மக்கள் உரிமைகளை பறித்த 35-ஏ சட்டப்பிரிவு – உச்ச நீதிமன்றம்

Share it if you like it

காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் 370 வது சட்டப்பிரிவு கடந்த 2019-ஆண்டு ரத்து செயப்பட்டது. இதை எதிர்த்து வழக்குகள்தொடரப்பட்ட நிலையில்உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சந்திர சூட் தலைமையிலான அரசியல் சாசன அமர்வு முன்னிலையில் விசாரணை நடைபெற்று வருகிறது. நேற்று (திங்கட்கிழமை) 11-வது நாளாக நடைபெற்ற விசாரணையின் போது கருத்து தெரிவித்த தலைமை நீதிபதி சந்திர சூட் அரசியல் அமைப்பின் 35-ஏ.பிரிவு, ஜம்மு-காஷ்மீரில் வசிக்காத மக்களின் சில முக்கிய உரிமைகளை பறித்துள்ளதாக குறிப்பிட்டார்.காஷ்மீரில் அரசியல் அமைப்பு சட்ட 35- ஏ பிரிவை ரத்து செய்த பிறகு முதலீடுகள் அதிகரிக்கத் தொடங்கியுள்ளதாகவும் இதுவரை 16 லட்சம் சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளதாகவும் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா தெரிவித்தார்.வழக்கு விசாரணை இன்று (செவ்வாய்கிழமை) 12வது நாளாக நடைபெற்றது.


Share it if you like it