திருக்குறளை மக்கள் படிக்க பெரியார்தான் காரணம் – அருள்மொழி!

திருக்குறளை மக்கள் படிக்க பெரியார்தான் காரணம் – அருள்மொழி!

Share it if you like it

திருக்குறளை படிக்க விருப்பமும், புரிதலும் ஏற்பட பெரியார் தான் காரணம் என அருள்மொழி கூறியிருப்பது பொதுமக்கள் மத்தியில் பெரும் சிரிப்பலையை ஏற்படுத்தியுள்ளது.

திராவிடர் கழகத்தின் தீவிர ஆதரவாளராக இருப்பவர் அருள்மொழி. இவர், கீ. வீரமணியை போன்று ஹிந்துக்களின் உணர்வுகளை காயப்படுத்த கூடியவர். அதே வேளையில், பல்வேறு கட்டுகதைகளையும், பொய் மூட்டைகளையும் அவிழ்த்து விடுவதில் கில்லாடியான பெண்மணி என்பது பலரின் குற்றச்சாட்டு. அதனை மெய்ப்பிக்கும் வகையில், திருக்குறள் குறித்து அருள்மொழி பேசிய காணொளி ஒன்று தற்போது வைராலகி வருகிறது.

அருள் மொழி கூறியதாவது ;

தந்தை பெரியார் மேற்கொண்ட முயற்சியில் தான், திருக்குறளை பற்றிய புரிதல், விருப்பம், மதிப்பு, புத்தூயிர் பெற்றது என்று கூறியிருக்கிறார். ஈ.வெ.ரா.விற்கு முன்பு தமிழர்கள் யாரும் திருக்குறளை படித்தது இல்லையா? அந்நூல் பற்றிய புரிதல் மக்களுக்கு இல்லையா? ஈ.வெ.ரா. வந்துதான் தமிழர்களுக்கு புரிய வைத்தாரா? என நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

திருக்குறளை தங்க தட்டில் வைத்த மலம் என்று சொன்னவர் ஈ.வெ.ரா. இவரா? திருக்குறளுக்கு பெருமை சேர்த்து இருப்பார் என்பதே அனைவரின் கேள்வியாக உள்ளது.


Share it if you like it