அபுதாபியில் அசால்ட்டாக இருந்த ஆருத்ரா கோல்டு நிறுவன இயக்குநர் ராஜசேகர் அதிரடி கைது !

அபுதாபியில் அசால்ட்டாக இருந்த ஆருத்ரா கோல்டு நிறுவன இயக்குநர் ராஜசேகர் அதிரடி கைது !

Share it if you like it

சென்னை அமைந்தகரையை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வந்த ஆருத்ரா கோல்டு நிறுவனம், வாடிக்கையாளர்கள் முதலீடு செய்யும் பணத்திற்கு அதிக வட்டி வழங்குவதாக கூறி வசூல் செய்தது. ஆனால் சொன்னப்படி வட்டி வழங்கமால் மொத்தமாக மோசடி செய்தது. ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்களிடம் சுமார் 2438 கோடி ரூபாய் மோசடி செய்தது.

இதுகுறித்த புகார்களின் அடிப்படையில் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கில் இதுவரை 40 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், ஆருத்ரா நிறுவன இயக்குநர்கள் 21 பேரை கைது செய்துள்ளனர். இந்நிலையில் ஆருத்ரா நிறுவனத்தின் இயக்குநர்களில் ஒருவரான ராஜசேகர் கைது செய்யப்பட்டுள்ளார். அவருக்கு எதிராக லுக் அவுட் நோட்டீஸ் மற்றும் ரெட் கார்னர் நோட்டீஸ் வழங்கப்பட்டிருந்த நிலையில் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார். அபுதாபியில் தலைமறைவாக இருந்த ராஜசேகரை போலீசார் கைது செய்துள்ளனர்.

மேலும் ஆருத்ரா மோசடி வழக்கில் நடிகரும் தயாரிப்பாளருமான ஆர்.கே சுரேஷ் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.அவரது வங்கிக்கணக்கை ஆய்வு செய்த பொருளாதார குற்றப்பிரிவு போலீசார், சட்ட விரோத பணப்பரிமாற்றம் செய்யப்பட்டதையும் கண்டுபிடித்தனர். இதுகுறித்து பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் விசாரணைக்கு பலமுறை ஆஜராகுமாறு சம்மன் அனுப்பியும் ஆர்கே சுரேஷ் ஆஜராகவில்லை.

ஆர்கே சுரேஷ் துபாயில் தலைமறைவாக உள்ளதாக கூறப்படுகிறது. அவரது வங்கிக்கணக்குகள் மற்றும் சொத்துக்களை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் முடக்கியுள்ளனர். மேலும் ஆர்கே சுரேஷுக்கு எதிராக லுக் அவுட் நோட்டீஸ் பிறக்கப்பட்டது. இந்நிலையில் லுக்-அவுட் நோட்டீஸை திரும்ப பெறக் கோரி ஆர்.கே.சுரேஷ் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

அதில் தனக்கும் பண மோசடிக்கும் எந்த தொடர்பும் இல்லை என்றும் டிசம்பர் 10 ஆம் தேதி சென்னை வரவுள்ளதால் தனக்கு எதிரான லுக் அவுட் நோட்டீஸை திரும்ப பெறுமாறு கோரிக்கை விடுத்திருந்தார். இந்நிலையில் இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், ஆர்கே சுரேஷ் டிசம்பர் 12 தேதி போலீஸாரின் விசாரணைக்கு நேரில் ஆஜராக வேண்டும். அவரை கைது செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டால் உயர் நீதிமன்றத்தின் முன்அனுமதி பெற வேண்டும் என்றும் தெரிவித்தது. மேலும், அவருக்கு எதிராக பிறப்பிக்கப்பட்ட லுக்-அவுட் நோட்டீஸ் நிறுத்தி வைக்கவும் உத்தரவிட்ட சென்னை உயர்நீதிமன்றம், வழக்கு விசாரணையை டிசம்பர் 18 ஆம் தேிக்கு ஒத்தி வைத்துள்ளது.


Share it if you like it