பாதிரியார் ஜார்ஜ் சொன்னது உண்மை தான் போல..! அமைச்சரின் பேச்சால் சர்ச்சை

பாதிரியார் ஜார்ஜ் சொன்னது உண்மை தான் போல..! அமைச்சரின் பேச்சால் சர்ச்சை

Share it if you like it

கிறிஸ்தவ மிஷனரிகள் மதமாற்றம் செய்வதற்காக தனக்கு தோதான காட்சிகளை ஆட்சியில் அமர்த்த முயற்சித்து வந்தன. அதற்காக கிறிஸ்தவமக்களை மத்திய பாஜக அரசிற்கு எதிராக திருப்பிவிட்டு அவர்களை வாக்கு வங்கிகளாக மற்றும் செயலில் ஈடுபடுகின்றன.

அதன் வெளிப்பாடாக கடந்த சில தினங்களுக்கு முன்பு நாகர்கோயிலில் பேசிய பாதிரியார் ஜார்ஜ் பொன்னையா, திமுக வெற்றி பெற்றது கிறிஸ்தவர்கள் போட்ட பிச்சை என பேசி இருந்தார். இதற்க்கு பலரும் கண்டனம் தெரிவித்தாலும் திமுகவினர் மௌனம் சாதித்து வந்தனர். இதனால் திமுக அரசு கிறிஸ்தவ மிஷனரிகளின் கைக்கூலியாக செயல்படுகிறதோ என்ற சந்தேகத்தை பலதரப்புக்கும் எழுப்பியது.

அதனை மெய்ப்பிக்கும் வகையில் பல்வளத்துறை அமைச்சர் நாசர் பேசி உள்ளார். திருவள்ளூர், மணவாள நகரில், அற்புத ஜெபகோபுரம் ஏ.ஜி., தேவாலயத்தின், 40ம் ஆண்டு துவக்க விழாவில், சிறப்பு விருந்தினராக பங்கேற்ற பல்வளத்துறை அமைச்சர் நாசர் “கிறிஸ்தவர்களின் வலிமையான ஜெபத்தால் தான், இன்று மாநிலத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு, தி.மு.க., ஆட்சிக்கு வந்துள்ளது, கூடிய விரைவில் மத்தியிலும் ஆட்சி மற்றம் ஏற்படும்” என பேசி உள்ளார்.

அமைச்சரின் இந்த பேச்சு திமுகவுக்கு வாக்களித்த ஹிந்துக்கள் மத்தியில், தான் இரண்டாம் குடிமக்களாக மாற்றப்படுகிறோமோ என்ற அச்சத்தை ஏற்படுத்தி உள்ளதாக அரசியல் நோக்கர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.


Share it if you like it