அஸ்ஸாமின் புகழ் பெற்ற கோவில்களில் ஒன்றாக விளங்கும் காளி கோவிலில் மர்ம நபர்கள் மாட்டு எலும்பு துண்டுகளை வீசி சென்ற சம்பவம் அம்மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
அஸ்ஸாம் மாநிலத்தில் உள்ள மாவட்டங்களில் ஒன்றாக இருப்பது ஹைலாகண்டி. இந்த மாவட்டத்தில், புகழ் பெற்ற ஆலயங்களில் ஒன்றாக இருப்பது காளி கோவில். இந்த கோவிலின், வாசலில் மர்ம நபர்கள் மாட்டு எலும்பு துண்டுகளை வீசி சென்றுள்ளனர்.
இதையடுத்து, காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அந்த வகையில், சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் எலும்பு துண்டுகளை அப்புறப்படுத்தினர். இந்த காணொளிதான் தற்போது வைரலாகி வருகிறது.