அண்ணாமலை கொடுத்த உறுதி – உற்சாகம் அடைந்த மக்கள்

அண்ணாமலை கொடுத்த உறுதி – உற்சாகம் அடைந்த மக்கள்

Share it if you like it

பாரதீய ஜனதா கட்சியின் தேசிய தலைவர் J P நட்டா அவர்கள் முன்னாள் IPS அதிகாரி அண்ணாமலை அவர்களை தமிழக பாஜக தலைவராக நியமித்துள்ளார். இதையடுத்து வருகின்ற வெள்ளிக்கிழமை 16ஆம் தேதி சென்னை பாஜக அலுவலகத்தில் அண்ணாமலை தலைவராக பொறுப்பேற்கும் நிகழ்ச்சி நடைப்பெற உள்ளது. அதற்காக அவர் நேற்று கோவையில் இருந்து சென்னைக்கு ஊரவலமாக புறப்பட்டுள்ளார். பாஜக தொண்டர்கள் மற்றும் பொது மக்கள் அண்ணாமலை அவர்கள் செல்லும் வழியெல்லாம் மலர் தூவி வரவேற்ற வண்ணம் உள்ளனர்.

அப்பொழுது மக்கள் மத்தியில் பேசிய அண்ணாமலை ”13 ஆயிரம் கிராமங்களில் கட்சி கொடியையும் சின்னதையும் கொண்டு சேர்ப்பேன்” என்றார் அதுமட்டுமின்றி “மோடி அவர்களின் ஒவ்வொரு திட்டத்தையம் வீடு வீடாக கொண்டு செல்ல வேண்டும்” என்றும், “இன்னும் 5 ஆண்டுகளில் தமிழகத்தில் பாஜக ஆட்சி அமைப்பது உறுதி” எனவும் தெரிவித்தார்.

 


Share it if you like it