திருச்சியில் நிகழ்ந்த கோர விபத்து!

திருச்சியில் நிகழ்ந்த கோர விபத்து!

Share it if you like it

மதுவால் நிகழ்ந்த சாலை விபத்து திருச்சி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கத்தை சேர்ந்த ஹரிஹரன் என்பவர் ஓட்டி வந்த ஆட்டோ மீது திடீரென பேரிகார்டு கவிழ்ந்துள்ளது. இதன்காரணமாக, அவ்விடத்தில் விபத்து ஏற்பட்டுள்ளது. அப்பொழுது, எதிர்திசையில் ஆட்டோ ஓட்டி வந்த பிரதீப் குமார் தனது கட்டுப்பாட்டை இழந்து பக்தர்கள் செல்லும் நடைபாதையின் மீது ஆட்டோவை ஏற்றியுள்ளார். அச்சமயத்தில், ஸ்ரீரங்கம் கோவிலில் சாமி தரிசனம் செய்து விட்டு வந்த பெண்மணி (ராதா-60) மீது ஆட்டோ மோதிய வேகத்தில் தலை நசுங்கி அவர் சம்பவ இடத்திலேயே உயிர் இழந்துள்ளார். இதனை தொடர்ந்து, காவல்துறையினர் மேற்கொண்ட தீவிர விசாரணையில் ஹரிஹரன் மதுபோதையில் இருப்பது தெரியவந்துள்ளது. இச்சம்பவம் திருச்சி மக்களிடையே மிகப்பெரிய சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுவால் இதுபோன்ற சம்பவங்கள் தமிழகத்தில் தொடர்ந்த வண்ணம் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


Share it if you like it