மாதா அம்ருதானந்தமயி அவர்களுக்கு அயோத்தி ஶ்ரீராமர் கோவில் கும்பாபிஷேக அழைப்பிதழ் !

மாதா அம்ருதானந்தமயி அவர்களுக்கு அயோத்தி ஶ்ரீராமர் கோவில் கும்பாபிஷேக அழைப்பிதழ் !

Share it if you like it

பாரதத்தின் ஆன்மீக கலாச்சாரத்தின் அடையாளமாக விளங்கவிருக்கும் அயோத்தி ஶ்ரீராமர் கோவில் கும்பாபிஷேக விழா, வரும் ஜனவரி 22 அன்று நடைபெறவிருக்கிறது. கடந்த 2020 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம், மாண்புமிகு பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்த கோவில் திருப்பணிகள் நிறைவடைந்து, வரும் 22ம் தேதி அன்று நமது பிரதமர் கரங்களால் திறந்து வைக்கப்பட உள்ளது. பகவான் ஶ்ரீராமர் கோவில் கும்பாபிஷேகம், பாரதத்தின் ஒட்டுமொத்த மக்களுக்கும் மற்றுமொரு தீபாவளிப் பண்டிகையாக இருக்கும் என்பதில் சந்தேகமே இல்லை. பாரத பிரதமர் மோடி அவர்கள், கோவில் திறப்பு தினத்தன்று நாட்டு மக்கள் அனைவரையும் அவரவர் இல்லங்களில் தீபங்கள் ஏற்றிக் கொண்டாடக் கேட்டுக்கொண்டுள்ளார். இந்நிகழ்விற்காக , ஆர்.எஸ்.எஸ். மற்றும் பாஜக பிரமுகர்கள், தன்னார்வலர்கள் என பலரும் அரசியல் தலைவர்கள், பிரபலங்கள், பொதுமக்களை சந்தித்து அழைப்பிதழ் மற்றும் அட்சதையை வழங்கி வருகின்றனர். முன்னதாக தன்னார்வலர்கள் ராஜ்பவனில் ஆளுநர் ரவியை சந்தித்து ஸ்ரீராம ஜென்மபூமி அட்சதையை வழங்கினர். அதன்பிறகு ஆர்.எஸ்.எஸ். அமைப்பினர் எடப்பாடி. பழனிசாமியை சந்தித்து அழைப்பிதழை வழங்கினர். இதுதவிர திரை பிரபலங்களான நடிகர் ரஜினிகாந்த் அவர்களுக்கும் அழைப்பதழ் வழங்கப்பட்டது.

இந்தநிலையில் அயோத்தி ஶ்ரீராமர் கோவில் கும்பாபிஷேக அழைப்பிதழை மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி ஆன்மிக இளைஞர் அணி இயக்க தலைவர் திரு.கோ.ப செந்தில்குமார் அவர்களுக்கு செங்கல்பட்டு மாவட்ட ஆர்.எஸ்.எஸ் தலைவர் சுவாமிநாதன், ஆர்.எஸ்.எஸ் வட தமிழக ஊடக பொறுப்பாளர் நரசிம்மன் மற்றும் பாஜகவை சேர்ந்த பாஸ்கர் ஆகியோர் வழங்கினர்.

மேலும் அயோத்தி ஶ்ரீராமர் கோவில் கும்பாபிஷேக அழைப்பிதழை வேலூரில் உள்ள ஸ்ரீபுரம் நாராயணி சக்தி பீட சக்தி அம்மாவிற்கு வேலூர் ஆர்.எஸ்.எஸ் கோட்ட தலைவர் ஜெகதீசன்,கோட்ட அமைப்பாளர் புவன் ராஜ்குமார் மற்றும் VHP மாவட்ட தலைவர் தூயமணி ஆகியோர் வழங்கினர்.

அயோத்தி ஶ்ரீராமர் கோவில் கும்பாபிஷேக அழைப்பிதழை தைலாபுரத்தில் உள்ள மருத்துவர் ஐயா ராமதாஸ் அவர்களுக்கு வட தமிழக ஆர்.எஸ்.எஸ் பொறுப்பாளர் தேன்.சொ செந்தில், விழுப்புரம் வடக்கு மாவட்ட பாஜக தலைவர் ராஜேந்திரன் மற்றும் மாவட்ட பொது செயலாளர் எத்திராஜ் ஆகியோர் வழங்கினர்.

அயோத்தி ஶ்ரீராமர் கோவில் கும்பாபிஷேக அழைப்பிதழை பறையர் பேரியக்கத்தின் நிறுவனர் திரு.சிவகுரு பறையனார் அவர்களுக்கு ஆர்.எஸ்.எஸ் வடதமிழக பொறுப்பாளர் சீனிவாசன், சென்னை மாநகர பொறுப்பாளர் தர்மலிங்கம்,மற்றும் வியாசை ரவி ஆகியோர் வழங்கினர்.

அயோத்தி ஶ்ரீராமர் கோவில் கும்பாபிஷேக அழைப்பிதழை தாம்பரம் இந்து மிஷன் மருத்துவமனை நிறுவனர் பத்மஸ்ரீ D.K சீனிவாசன் அவர்களுக்கு தாம்பரம் மாவட்ட ஆர்.எஸ்.எஸ் தலைவர் சீதாராமன், இந்து முன்ணனி வழக்கறிஞர் செந்தில், VHP சேர்ந்த கணேஷ் ஆகியோர் வழங்கினர்.

அயோத்தி ஶ்ரீராமர் கோவில் கும்பாபிஷேக அழைப்பிதழை சத்குரு ஜக்கி வாசுதேவ் அவர்களுக்கு ஆர்.எஸ்.எஸ் தென் பாரத அமைப்பாளர் செந்தில் அவர்கள் வழங்கினார். இதுதொடர்பாக சத்குரு அவர்கள் அவருடைய X பதிவில் குறிப்பிட்டிருப்பதாவது :- அயோத்தி ராமர் கோவில் – ஒரு குறிப்பிட்ட நம்பிக்கைக்காக அல்ல, மாறாக தங்களுக்குள் தெய்வீகத்தை அடைய விரும்பும் அனைவருக்கும் மீண்டும் அர்ப்பணிக்கப்பட்ட கோயில். ராமர் பிறந்த இடத்தில் எழுந்தருளியிருப்பதைக் காண எனக்கு கிடைத்த பாக்கியம். சிறந்த வாழ்த்துக்கள் & ஆசிகள்.

அயோத்தி ஶ்ரீராமர் கோவில் கும்பாபிஷேக அழைப்பிதழை மாதா அம்ருதானந்தமயி அவர்களுக்கு ஆர்.எஸ்.எஸ் மூத்த அமைப்பாளர் சேதுமாதவன் வழங்கினார்.

அயோத்தி ஶ்ரீராமர் கோவில் கும்பாபிஷேக அழைப்பிதழை புதிய நீதிக்கட்சி தலைவர் A.C சண்முகம் அவர்களுக்கு வேலூர் கோட்ட ஆர்.எஸ்.எஸ் அமைப்பாளர் புவன் ராஜ்குமார் மற்றும் VHP மாநில பொறுப்பாளர் பிரபாகரன் ஆகியோர் வழங்கினர்.


Share it if you like it