பல்லடம் அருகே தனது வீட்டின் அருகே மது குடித்ததை கண்டித்தவரையும் அவர்களது உறவினர்கள் மூன்று பேரையும் வெங்கேடேசன் என்பவர் உள்பட மூன்று பேர் சேர்ந்து துண்டு துண்டாக வெட்டி கொடூரமாக கொன்றனர். இந்த கொலை சம்பவம் தமிழ் நாட்டையே உலுக்கியது. இதில் முக்கிய குற்றவாளி வெங்கடேசனிடம் விசாரணை நடத்தி வரும் போலீசார், அவர் ஆயுதங்களை பதுக்கி வைத்துள்ள இடத்தை காட்ட அழைத்து சென்றனர். அப்போது வெங்கடேசன் தப்பி செல்ல முயற்சி செய்ததால் போலீசார் துப்பாக்கி சூடு நடத்தியுள்ளனர். இந்த சம்பவத்தில் வெங்டேசனின் கால் முறிந்த்தாக கூறப்படும் நிலையில் அவர் பல்லடம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்