பட்டப்பகலில் மார்க்கெட்டில் ஹிந்து பெண் கண்டதுண்டமாக வெட்டிக் கொலை: ஷகீல் வெறி!

பட்டப்பகலில் மார்க்கெட்டில் ஹிந்து பெண் கண்டதுண்டமாக வெட்டிக் கொலை: ஷகீல் வெறி!

Share it if you like it

டெல்லியில் அஃப்தாப் என்பவனால் ஷ்ரதா என்கிற ஹிந்து இளம்பெண் 35 துண்டுகளாக வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தின் பரபரப்பு அடங்காத நிலையில், அதேபோல மற்றொரு அதிர்ச்சி சம்பவம் பீகாரில் அரங்கேறி இருக்கிறது.

பீகார் மாநிலம் பாகல்பூர் அருகே உள்ள ஸோட்டி டெயிலோரி கிராமத்தைச் சேர்ந்தவர் அஷோக் யாதவ். இவரது மனைவி நீலம் தேவி. இவர்களது வீட்டுக்கு பக்கத்திலுள்ள நிலத்தில் முகமது ஷகீல் என்பவன் விவசாயம் செய்து வந்திருக்கிறான். அந்த வகையில், அஷோக் யாதவுக்கும், முகமது ஷகீலுக்கும் பழக்கம் ஏற்பட்டிருக்கிறது. இதனால், ஷகீல் அவ்வப்போது அஷோக் யாதவ் வீட்டிற்கு வந்து சென்றிருக்கிறார். அப்போது, அஷோக் யாதவின் மனைவி நீலம் தேவியிடம், ஷகீல் தவறாக நடக்க முயற்சி செய்திருக்கிறார். இதை நீலம் தேவி தனது கணவரிடம் சொல்லி இருக்கிறார். எனவே, ஷகீலை அழைத்து கண்டித்த அஷோக் யாதவ், இனிமேல் தனது வீட்டிற்கு வரக்கூடாது என்று எச்சரித்து அனுப்பி இருக்கிறார்கள்.

இந்த நிலையில், அருகிலுள்ள மார்க்கெட்டிற்கு பொருட்கள் வாங்குவதற்காக நீலம் தேவி கடந்த சனிக்கிழமை சென்றிருக்கிறார். நீலம் தேவி மார்க்கெட்டுக்கு வருவதை ஏற்கெனவே அறிந்திருந்த முகமது ஷகீல், ஏற்கெனவே மார்க்கெட்டுக்குச் சென்று, இறைச்சி வெட்டும் கத்தியுடன் தயாராக இருந்திருக்கிறார். இதையறியாத நீலம் தேவி, மார்க்கெட்டில் பொருட்கள் வாங்கிக் கொண்டிருந்தார். அப்போது, அங்கு வந்த ஷகீல், மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து, நீலம் தேவியின் கைகள், கால்கள், மார்பகங்கள் மற்றும் மூக்கு, காதுகள் என கண்டதுண்டமாக வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். மார்க்கெட்டில் இருந்த சிலர், நீலம் தேவியை அடையாளம் கண்டு அவரது கணவருக்கு தகவல் தெரிவித்தனர். பின்னர், நீலம் தேவியை மீட்டு அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், அதற்குள்ளாக நீலம் தேவி உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்திருக்கிறார்கள்.

இதையடுத்து, இச்சம்பவம் குறித்து போலீஸில் புகார் செய்யப்பட்டது. போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்ததில், நீலம் தேவியை வெட்டிக் கொலை செய்தது முகமது ஷகீல்தான் என்பது உறுதி செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து, ஷகீலின் வீட்டிற்குச் சென்றனர் போலீஸார். ஆனால், அங்கு அவர் இல்லாததால் அவரது குடும்பத்தினர் 5 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும், தலைமறைவாக இருக்கும் ஷகீலை தேடிவருகின்றனர். முகமது ஷகீலை பிடிக்க தனிப்படைகள் அமைக்கப்பட்டிருப்பதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இச்சம்பவம் பீகார் மட்டுமல்லாது ஒட்டுமொத்த நாட்டு மக்களையும் அதிர்ச்சியில் உறையச் செய்திருக்கிறது.


Share it if you like it