பா.ஜ.க. வெளியிட்ட அதிரடி அறிக்கை!

பா.ஜ.க. வெளியிட்ட அதிரடி அறிக்கை!

Share it if you like it

பா.ஜ.க. தேசியப் பொதுச் செயலாளர் திரு. சி.டி.ரவி, எம்.எல்.ஏ. வெளியிட்ட பத்திரிகைச் செய்தி இதோ.

 1972-ல் அ.தி.மு.க. உருவானபோது டாக்டர் எம்.ஜி.ஆர். அவர்கள், தி.மு.க.வை ‘தீய சக்தி’ என்று அழைத்தார். அந்த நிலையிலிருந்து, தற்போது 2023- வரை தி.மு.க. இன்னும் மாறவில்லை. செல்வி ஜெயல லிதா அம்மாவும், தான் உயிருடன் இருக்கும் வரை, தி.மு.க.வை “தீய சக்தி” என்று தான் அழைத்தார்.

 மு.க. ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க. அரசு நாளுக்கு நாள் மக்கள் செல்வாக்குப் பெறாத நிலையில், ஈரோடு கிழக்கில் இந்த இடைத்தேர்தல் நடைபெற இருக்கிறது.  மேலும், தி.மு.க. என்ற கட்சி, ஒரு தனிப்பட்ட குடும்ப லாபத்திற்காகவும், அதே நேரத்தில் தமிழ் மக்களுக்கு எதிராகவும், தொடர்ந்து செயல்படுகிறது. இதனால், மக்களிடையே தி.மு.க. ஆட்சிக்கு எதிராக பெரும் எதிர்ப்பு மனநிலை உள்ளது.

மின்கட்டண உயர்வு, சொத்து வரி உயர்வு, பால் விலை உயர்வு உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வு, போதைப் பொருட்கள் நடமாட்டம், சட்டம் ஒழுங்கு சீர்கேடுகள் என்ற மக்கள் விரோதப் போக்குகள் ஒருபுறம். அது மட்டுமின்றி, தமிழக் கலாச்சாரத்தின் மீது தி.மு.க. அமைச்சர்கள், எம்.பி.க்கள், மூத்த தலைவர்கள் தொடர்ந்து நடத்தி வரும் வெறுப்பஉணர்வும், தாக்குதல்களும் மக்களிடையே பெரும் அதிருப்தியை உருவாக்கியுள்ளது.  பரவலாக நடைபெறும் கட்ட பஞ்சாயத்தும், பெண்களுக்கு எதிரான குற்றங்களின் அதிகரிப்பும், அதைக் கட்டுப்படுத்த வழியில்லாத தி.மு.க.வுக்கு எதிராக, தமிழ் மக்கள் இருப்பதை நமக்கு தெளிவாக க் காட்டுகிறது.

தி.மு.க. பணபலம் மற்றும் அரசு இயந்திரங்களை தவறாக பயன்படுத்துவதால், இடைத்தேர்தல் முன்னேற்பாடுகள் எப்படி நடக்கிறது என்பதை நாம் அனைவரும் அறிவோம். இப்போதே ஈரோட்டில் நடப்பதையெல்லாம் பார்த்து வருகிறோம். அதனால்தான் இந்த இடைத்தேர்தலில் இந்த தீய சக்தியை தோற்கடிக்க தேசிய ஜனநாயக் கூட்டணியும், அ.தி.மு.க.வும் உறுதியுடன் ஒன்றுபடுவது மிக அவசியம்.

இன்று காலை தமிழக முன்னால் முதல்வரும், எதிர்க்கட்சித் தலைவருமான திரு. எடப்பாடி பழனிசாமி அவர்களையும், மற்றும் முன்னாள் முதல்வர் திரு. ஓ. பன்னீர் செல்வம் அவர்களையும், ஈரோடு இடைத்தேர்தல் மற்றும் தமிழகம் தொடர்பான பிற பிரச்சினைகள் குறித்துப் பேசினோம். இது ஒரு நல்ல சந்திப்பாக அமைந்தது. நமது தேசிய தலைவர் திரு. ஜே.பி.நட்டா அவர்கள் சார்பாக சில விஷயங்களை தெரிவித்தோம்.  இந்த இடைத்தேர்தலில் மக்கள் நலன, தமிழகத்தின் நலனைக் கருத்தில் கொண்டு தி.மு.க. கூட்டணியை தோற்கடிக்க இருவரும் இணைந்து பயணிக்க வேண்டும் என்று இருவரிடமும் வலியுறுத்தியுள்ளோம் என குறிப்பிட்டுள்ளார்.


Share it if you like it