கையில் சாப்பிட்ட இலை, டம்ளருடன்… வைரலாகும் அண்ணாமலை புகைப்படம்!

கையில் சாப்பிட்ட இலை, டம்ளருடன்… வைரலாகும் அண்ணாமலை புகைப்படம்!

Share it if you like it

தொண்டர் வீட்டில் சாப்பிட்டு விட்டு, தான் சாப்பிட்ட இலையை தானே எடுத்துச் சென்று அகற்றிய பா.ஜ.க. தலைவர் அண்ணாமலையில் செயல் தொண்டர்களால் பெரிதும் பாராட்டப்பட்டு வருகிறது.

தமிழக பா.ஜ.க. தலைவராக இருப்பவர் அண்ணாமலை. மாஜி ஐ.பி.எஸ். அதிகாரியான இவர்தான், தற்போது தமிழக அரசியலில் அனைத்துக் கட்சித் தலைவர்ளையும் ஓரம்கட்டி விட்டு தலைப்புச் செய்தியாக மாறி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறார். குறிப்பாக, ஆளும் கட்சியான தி.மு.க.வுக்கு சிம்ம சொப்பனமாக இருந்து வருகிறார். தி.மு.க. செய்யும் ஊழல்களை அடுத்த சில மணி நேரங்களிலேயே அம்பலப்படுத்தி அதிர்ச்சி அளித்து வருகிறார். இதனால், அண்ணாமலையைக் கண்டு உ.பி.ஸ்கள் கதிகலக்கிப் போய் கிடக்கிறார்கள். இது ஒருபுறம் இருக்க, அண்ணாமலை தனது செயல்பாடுகளால் தமிழக மக்கள் மனதிலும் சிறப்பான இடத்தைப் பிடித்து வருகிறார். இவரது செயல்பாடுகளைப் பார்த்த வியந்துபோன தமிழக இளைஞர்கள் பா.ஜ.க.வில் ஐக்கியமாகி வருகின்றனர். சுருக்கமாகச் சொல்ல வேண்டுமானால், சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை கட்சிப் பாகுபாடின்றி அனைவருக்கும் பிடித்த தலைவராக மாறி வருகிறார் அண்ணாமலை. இதை மெய்ப்பிக்கும் கடந்த மாதம் தி.மு.க.வைச் சேர்ந்த ஒரு தொண்டரின் மகள் அண்ணாமலையின் செயல்பாடுகளால் ஈர்க்கப்பட்டு, அவருடன் போட்டோ எடுத்துக் கொண்டார். இந்த போட்டோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி, மாஸ் காட்டியது.

அதேபோல, தற்போதும் ஒரு புகைப்படம் வைரலாகி வருகிறது. அதாவது, கன்னியாகுமரியில் நடந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ளச் சென்றிருந்தார் அண்ணாமலை. அப்போது, அங்குள்ள ஒரு தொண்டர் தனது வீட்டுக்கு சாப்பிட வரவேண்டும் என்று அழைத்திருக்கிறார். அதன்படி, அங்கு சென்று சாப்பிட்ட அண்ணாமலை தான் சாப்பிட்ட இலையையும், தனக்கு குடிப்பதற்கு தண்ணீர் வைத்த கப்பையும் தானே எடுத்துச் சென்று அகற்றினார். இதை மற்றொரு தொண்டர் போட்டோ எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவேற்றம் செய்து விட்டார். இந்த போட்டோதான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. ஏனெனில், நாம் எங்கு சாப்பிடச் சென்றாலும், சாப்பிடும் வீட்டில் இருப்பவர்கள்தான் இலையை எடுப்பது வழக்கம். நிகழ்ச்சி என்றால், அங்கு இலை எடுப்பதற்கென்றே தனியாக ஆள் இருக்கும். அப்படி இருந்தும், அண்ணாமலை தான் சாப்பிட்ட இலையை தானே எடுத்துச் சென்று அகற்றியது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தி இருக்கிறது.

இதைப் பார்த்த பா.ஜ.க. தொண்டர்கள் பலரும், ஸ்டாலினை கிண்டல் செய்து வருகின்றனர். அதாவது, கடந்த சில தினங்களுக்கு முன்பு ஆவடியில் உள்ள நரிக்குறவர் சமுதாயத்தைச் சேர்ந்த ஒருவரின் வீட்டுக்குச் சென்று உணவருந்தினார் தமிழக முதல்வரும் தி.மு.க. தலைவருமான ஸ்டாலின். இந்த போட்டோவை தி.மு.க.வினர் வைரலாக்கினர். அதேசமயம், அங்கு என்ன நடந்தது என்பதை எதிர்க்கட்சிகள் அம்பலப்படுத்தி விட்டன. அதாவது, கடையில் வாங்கிய இட்லி, வடை, சட்னி, சாம்பார், கோழிக்கறி ஆகியவற்றுடன், புத்தம் புதிய தட்டி, டம்ளர், சட்டி ஆகியவற்றையும் வாங்கி ஏற்கெனவே நரிக்குறவர் வீட்டில் கொடுத்து, பின்னர் அதை ஸ்டாலினுக்கு பரிமாற வைத்ததை அம்பலப்படுத்தி விட்டனர். எனவே, ஸ்டாலின் புத்தம் புது தட்டில் உணவருந்தியதையும், அண்ணாமலை உணவருந்தி விட்டு இலையை எடுத்துச் செல்வதையும் ஒப்பிட்டு நெட்டிசன்களும், எதிர்க்கட்சியினரும் ஸ்டாலினை கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர். இதனால், அண்ணாமலை போட்டோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.


Share it if you like it