தொண்டர்களை காவு கொடுத்து தின்கிற கட்சி தி.மு.க. : பா.ஜ.க. மூத்த தலைவர்  பாய்ச்சல்!

தொண்டர்களை காவு கொடுத்து தின்கிற கட்சி தி.மு.க. : பா.ஜ.க. மூத்த தலைவர் பாய்ச்சல்!

Share it if you like it

தமிழக பா.ஜ.க. மாநில செயலாளர் அஸ்வத்தாமன் ஐ தமிழ் இணையதள ஊடகத்திற்கு அளித்த பேட்டி தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

அஸ்வத்தாமன் அளித்த பேட்டியில் கூறியதாவது ;

தி.மு.க.வின் வரலாறு என்னவென்று நாம் பார்த்தால், அக்கட்சி தனது தொண்டர்களை பலி கொடுத்து. தொண்டர்களை காவு கொடுத்து அதன் மூலமாக கட்சி வளர்த்து. அதன்மூலம் காசு பார்த்து ஒரு சில குடும்பங்கள் உட்கார்ந்து சாப்பிடும் கட்சி தி.மு.க. இல்லாத ஹிந்தி திணிப்பிற்கு தி.மு.க.வை சேர்ந்த ஒருவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார். தொண்டர்களை காவு கொடுத்து வளர்கிற கட்சி தி.மு.க. ஆனால், பா.ஜ.க. அவ்வாறு இல்லை. எங்கள் தலைவர்களை தியாகம் செய்து வளர்ந்த கட்சி பா.ஜ.க. காஷ்மீர் இந்த மண்ணில் இருந்து பிரிய கூடாது என்பதற்காக எங்களது முன்னோடி தலைவர் சியாமா பிரசாத் முகர்ஜி தனது உயிரை தியாகம் செய்து இருக்கிறார். இந்த அந்நிய நாட்டு சித்தாந்தங்கள் மட்டுமே இங்குள்ள அரசியலை ஆக்கிரமித்து கொண்டுள்ளது. இந்திய மண்ணின் சொந்த சித்தாந்தங்களை பேசப்பட வேண்டும் என்பதற்காக ஒருங்கிணைந்த மனித நேய கொள்கையை வகுத்து கொடுத்த பண்டிட் ஜீ மர்மான ரயிலில் மர்மமான முறையில் கொல்லப்பட்டார். தனது உயிரை தியாகம் செய்தார். தொண்டர்களை அல்ல தலைவர்களை தியாகம் செய்த இயக்கம். உயிருக்கே பயப்படாதவர்கள் பா.ஜ.க.வினர் ஜெயிலில் போட்டால் நாங்கள் என்ன பயந்து விடுவோமா என்று கூறியுள்ளார்.


Share it if you like it