மீண்டும் பொய் செய்தி பரப்பி அசிங்கப்பட்ட டி.ஆர். பாலு மகன்.!

மீண்டும் பொய் செய்தி பரப்பி அசிங்கப்பட்ட டி.ஆர். பாலு மகன்.!

Share it if you like it

டி.ஆர். பாலுவின் மகனும், மன்னார்குடி எம்.எல்.ஏ.வுமான டி.ஆர்.பி ராஜா உள்ளாட்சி தேர்தல் முடிவுகள் வரும் முன்பே பா.ஜ.க வேட்பாளர் உமா ஆனந்த் தோல்வியடைந்ததாக செய்தி வெளியிட்டு அசிங்கபட்ட சம்பவம் தமிழக மக்கள் மத்தியில் பெரும் சிரிப்பலையை ஏற்படுத்தியுள்ளது.

தி.மு.க மூத்த தலைவரும், நாடாளுமன்ற குழு தலைவருமாக இருப்பவர் டி.ஆர். பாலு. இவரின் மகனும் மன்னார்குடி எம்.எல்.ஏ-வுமான டி.ஆர்.பி ராஜா. 2013 ஆம் ஆண்டு காங்கிரஸ் ஆட்சி காலத்தில் நடைபெற்ற குடியரசு தின அணிவகுப்பில் கலந்து கொண்ட ஊர்தியை. பா.ஜ.க ஆட்சியில் நடைபெற்ற அணிவகுப்போடு ஒப்பிட்டு பொய் செய்தியை பரப்பி இருந்தார். இது பொய் செய்தி என டி.ஆர்.பி ராஜா-விற்கு பா.ஜ.க ஐடி விங் சிறந்த பதிலடியை கொடுத்த சம்பவம் மக்கள் மத்தியில் கடும் சிரிப்பலையை ஏற்படுத்தி இருந்தது.

இந்த நிலையில், நகர்புற உள்ளாட்சி தேர்தல் முடிவுகள் வரும் முன்பே, 134 வார்டு பா.ஜ.க வேட்பாளர் உமா ஆனந்தன் வெறும் 8 ஓட்டு வாங்கி தோல்வியடைந்துள்ளார் என தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்து இருந்தார். ஆனால், பா.ஜ.க வேட்பாளர் அபார வெற்றி பெற்றதை தொடர்ந்து தனது ட்விட்டர் பதிவை கமுக்கமாக நீக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Image


Share it if you like it