ரோட் சைடு பாரதி… ஹெச்.ராஜா மரண கலாய்!

ரோட் சைடு பாரதி… ஹெச்.ராஜா மரண கலாய்!

Share it if you like it

தி.மு.க. அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதியை, ரோட் சைடு பாரதி என்று அழைத்து மரண கலாய் கலாய்த்திருக்கிறார் பா.ஜ.க. மூத்த தலைவர் ஹெச்.ராஜா.

தி.மு.க. அமைப்புச் செயலாளராக இருப்பவர் முன்னாள் எம்.பி. ஆர்.எஸ்.பாரதி. வழக்கறிஞரான இவர், யாரையும் மதிக்காமல் மிகவும் தரம் தாழ்ந்து பேசுவார். பட்டியல் சமூகத்தினர் இன்று நீதிபதிகளாக இருப்பதற்குக் காரணம், கருணாநிதி போட்ட பிச்சை என்று கூறி, பட்டியல் சமூகத்தினரையும், அச்சமூக நீதிபதிகளையும் அவமானப்படுத்தினார். அதேபோல, மீடியாக்களை மும்பையிலுள்ள ரெட் லைட் ஏரியாவுடன் ஒப்பிட்டு ரெட் லைட் மீடியாக்கள் என்று கூறினார். இதனால், இவரை செல்லமாக ரெட் லைட் பாரதி என்று மீடியா துறையைச் சேர்ந்தவர்களும், மற்றவர்களும் அழைத்து வருகின்றனர்.

இந்த நிலையில், சென்னையில் கடந்த 10-ம் தேதி நடந்த பேராசிரியர் அன்பழகன் நூற்றாண்டு விழாவில் கலந்து கொண்டு பேசிய ரெட் லைட் பாரதி, தமிழக கவர்னர் ஆர்.என்.ரவியை, அவன் இவன் என்று ஏகவசனத்தில் பேசியதோடு, கையில் கிடைத்ததை எல்லாம் வைத்து அடித்திருந்தால், உருப்படியாக வீடு போய் சேர்ந்திருக்க முடியாது என்று, கொலை மிரட்டல் விடுக்கும் வகையில் பேசினார். ஆகவே, இவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பா.ஜ.க. கட்சியினர் வலியுறுத்தி வருகின்றனர்.

இந்த சூழலில், பா.ஜ.க. மூத்த தலைவர் ஹெச்.ராஜா செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, கவர்னரை ஆர்.எஸ்.பாரதி விமர்சித்தது குறித்து பேசியவர், ஆர்.எஸ்.பாரதியை ரோட் சைடு பாரதி என்று கூறினார். அதாவது, ஆர்.எஸ். என்றால் ரோட் சைடுதானே என்று நக்கலாகக் கூறினார். மேலும், கவர்னரை அவன் இவன் என்று ஏக வசனத்தில் பேசியதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், அவன் சொல்லுறான் என்று ஆர்.எஸ்.பாரதியை குறிப்பிட்டார். இந்த காணொளிதான் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதைப் பார்த்துவிட்டு பலரும் சபாஷ் சரியான பதிலடி என்று கமென்ட் செய்து வருகின்றனர்.


Share it if you like it