காவிரி விவகாரம் தொடர்பாக பாஜக உண்ணாவிரத போராட்டம் !

காவிரி விவகாரம் தொடர்பாக பாஜக உண்ணாவிரத போராட்டம் !

Share it if you like it

காவிரியில் இருந்து தமிழ்நாட்டிற்கு தண்ணீர் திறந்து விடுவது தொடர்பாக தமிழ்நாட்டுக்கும் கர்நாடகாவுக்கும் இடையே பிரச்சனை நிலவி வருகிறது. குறைவான மழைநீர் பொழிவினால் கர்நாடகாவிலே தண்ணீர் பற்றாக்குறை ஏற்படக்கூடிய சூழல் ஏற்பட்டுள்ளது என அம்மாநில முதல்வர் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.
காவிரி நீர் இல்லாததால் அதனை நம்பி பயிரிடப்பட்ட டெல்டா விவசாயிகள் விவசாயம் செய்ய முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. காவிரியில் இருந்து தண்ணீர் திறந்து விடுமாறு காவிரி நீர் மேலாண்மை ஆணையம் அறிவித்தும், அதனை பொருட்படுத்தாமல் தமிழகத்திற்கு தண்ணீர் திறந்துவிட மறுக்கிறது கர்நாடகா அரசு.

இந்நிலையில் காவிரி விவகாரம் தொடர்பாக வரும் 16 ஆம் தேதி தமிழக பாஜக சார்பில் கும்பகோணத்தில் உண்ணாவிரத போராட்டம் நடத்தப்படுவதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அறிவித்துள்ளார்.


Share it if you like it