காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் மகன் பா.ஜ.க.வின் இணைந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
கேரள காங்கிரஸ் கட்சியின் மிக மூத்த தலைவர் ஏ.கே. அந்தோணி. இவர், முன்னாள் ராணுவ அமைச்சர் உள்ளிட்ட பல்வேறு பொறுப்புகளை வகித்தவர். கேரள மாநிலத்தின் தவிர்க்க முடியாத சக்தியாக இவர் பார்க்கப்படுகிறார்.
இவரது, மகன் அனில் ஆண்டனி. இவர், இன்று பா.ஜ.க.வில் தம்மை இணைத்து கொண்டுள்ளார். அவருடன், கேரள பா.ஜ.க. தலைவர் சுரேந்திரன் மற்றும் மத்திய அமைச்சர் முரளீதரன் உடன் இருந்தனர்.
காங்கிரஸிலிருந்து தொடர்ந்து பல முக்கிய தலைவர்கள் விலகி வருகின்றனர். இப்படிப்பட்ட சூழலில், அனில் ஆண்டனி பா.ஜ.க.வில் இணைந்து இருப்பது கேரள மக்களிடையே தற்போது பேசுப்பொருளாக மாறியுள்ளது.