சரக்கை போட்டுட்டு பேசிருப்பாரு… செந்தில்பாலாஜியை பங்கம் செய்த அண்ணாமலை!

சரக்கை போட்டுட்டு பேசிருப்பாரு… செந்தில்பாலாஜியை பங்கம் செய்த அண்ணாமலை!

Share it if you like it

ரஃபேல் வாட்ச் சீரியல் நம்பர் மாறியிருப்பதாக அமைச்சர் செந்தில்பாலாஜி கூறியிருந்தது தொடர்பாக, பத்திரிகையாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, சாராய அமைச்சர் சரக்கை போட்டுவிட்டு பேசிருப்பாரு என்று பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை கூலாக கூறியிருப்பது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

தி.மு.க. ஆட்சிக்கு வந்த பிறகு, அக்கட்சியினர் செய்த ஊழல்கள், முறைகேடுகள் குறித்து பா.ஜ.க. தலைவராக இருக்கும் அண்ணாமலை அம்பலப்படுத்தி வருகிறார். இதனால் ஆத்திரமடைந்த அக்கட்சியின் அமைச்சர் செந்தில்பாலாஜி, அண்ணாமலை கட்டி இருக்கும் வாட்ச் குறித்து கேள்வி எழுப்பினார். இதற்கு விளக்கம் கொடுத்த அண்ணாமலை, அது ரஃபேல் வாட்ச் எனவும், விலை 3.50 லட்சம் ரூபாய் எனவும், உலகம் முழுவதும் வெறும் 500 வாட்ச்கள் மட்டுமே இருப்பதாகவும் தெரிவித்திருந்தார்.

இதையடுத்து, வாட்ச் பில்லை வெளியிடுமாறு அமைச்சர் செந்தில்பாலாஜியும், தி.மு.க.வினரும் சமூக வலைத்தளங்களில் வைரலாக்கி வந்தனர். இதற்கு பதிலளிக்கும் விதமாக செய்தியாளர்களிடம் பேசிய அண்ணாமலை, வாட்ச் பில் மட்டுமல்ல, தி.மு.க.வினரின் ஊழல் பட்டியலையும் சேர்த்து ஏப்ரல் 14-ம் தேதி வெளியிடுவேன் என்று தெரிவித்திருந்தார். அதன்படி, ஏப்ரல் 14-ம் தேதி வாட்ச் பில்லை வெளியிட்ட அண்ணாமலை, தி.மு.க. முக்கியப் புள்ளிகளின் சொத்துப் பட்டியலையும் வெளியிட்டு அதிர்ச்சி கொடுத்தார்.

இந்த நிலையில், அண்ணாமலை ஏற்கெனவே அளித்த பேட்டியில் வாட்ச்சின் சீரியல் நம்பர் 149 என்று சொன்னதாகவும், தற்போது 147 என்று சொல்வதாகவும் செந்தில்பாலாஜி கேள்வி எழுப்பி இருந்தார். இந்த சூழலில், திருச்சி சென்றிருந்த அண்ணாமலையிடம், செந்தில்பாலாஜி ட்வீட் குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த அண்ணாமலை, அழுக்கு படிந்திருப்பதால் சரியாக கவனிக்க முடியவில்லை. என்னிடம் இருப்பது இந்த ஒரு வாட்ச்தான். அதன் நம்பர் 147 தான். ஆனால், சாராய அமைச்சர் சரக்கு போட்டுவிட்டு பேசியிருப்பார் என்று கூறியிருக்கிறார்.

இந்த காணொளிதான் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.


Share it if you like it