பட்டியல் சமூகத்தை சேர்ந்த ஒருவரை முதல்வராக்க பா.ஜ.க-வால் மட்டுமே முடியும் வேறு எந்த கட்சியாலும்  முடியாது – அண்ணாமலை.!

பட்டியல் சமூகத்தை சேர்ந்த ஒருவரை முதல்வராக்க பா.ஜ.க-வால் மட்டுமே முடியும் வேறு எந்த கட்சியாலும் முடியாது – அண்ணாமலை.!

Share it if you like it

உண்மையான சமூக நீதியை காக்கும் கட்சி பா.ஜ.க தான்.

பட்டியல் சமூகம், அருந்ததியர் சமூகம், பழங்குடியினர் சமூகம், என அனைத்து சமூகத்திற்கும் உரிய முக்கியத்துவத்தை வழங்கும் ஒரே கட்சி பா.ஜ.க. என்பதில் யாருக்கும் மாற்று கருத்து இருக்க முடியாது. ஏழை அருந்ததியர் குடும்பத்தைச் சேர்ந்த ஒரு நபரை இதுவரை எந்த கட்சியும் மத்திய அமைச்சராக்கியதில்லை. கடந்த 75 ஆண்டுகளில் முதன் முறையாக, பாரதப் பிரதமர் நரேந்திர மோடி ஆட்சிக்கு வந்த பிறகே இந்த சாதனை படைக்க உள்ளது என்பது உண்மை.

மக்களவை, மாநிலங்களவைகளில் உறுப்பினர் அல்லாத ஒருவரை அமைச்சராக்கிய ஒரே கட்சி பா.ஜ.க. பட்டியல் இனத்தைச் சேர்ந்த 12 பேர், மலைவாழ் மக்கள் எட்டுப் பேர், ஓ.பி.சி-யில் 28 பேரை அமைச்சராக்கி அழகு பார்த்தவர் பிரதமர் மோடி என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை அவர்கள் பிரபல ஊடகமான பி.பி.சி-க்கு அளித்த பேட்டியில் பா.ஜ.க பற்றியும், சமூக நீதி குறித்தும் பேசியுள்ளார்.


Share it if you like it