வீரமரணமடைந்த பாரத அன்னையின் தவ பிள்ளைகளுக்கு அனைத்து மாவட்ட பா.ஜ.க அலுவலகங்களில் அஞ்சலி செலுத்த வேண்டும் – பா.ஜ.க தலைவர் அண்ணாமலை..!

வீரமரணமடைந்த பாரத அன்னையின் தவ பிள்ளைகளுக்கு அனைத்து மாவட்ட பா.ஜ.க அலுவலகங்களில் அஞ்சலி செலுத்த வேண்டும் – பா.ஜ.க தலைவர் அண்ணாமலை..!

Share it if you like it

ஹெலிகாப்டர் விபத்தில் வீரமணரம் அடைந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்த பா.ஜ.க தலைவர் அண்ணாமலை வேண்டுகோள்.

நீலகிரி மாவட்டம் குன்னூர் பகுதி அருகே உள்ள காட்டேரி என்னும் பகுதியில் முப்படை தளபதி பிபின் ராவத் அவர்கள் பயணம் செய்த ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானது இதில் பயணம் செய்த 14 பேர்களில் 13 பேர் அகால மரணம் அடைந்த சம்பவம் இந்திய மக்களிடையே பெருத்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை அவர்கள் தனது டுவிட்டர் பக்கத்தில் வீரமரணம் அடைந்த ராணுவ வீரர்கள் குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்ட பதிவு கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

நாளை மதியம் 2 மணி அளவில் அனைத்து மாவட்ட பா.ஜ.க அலுவலகங்களில், மறைந்த நம்முடைய முப்படை தளபதி Gen. பிபின் ராவத் அவர்களுக்கும்; திருமதி மதுளிக ராவத்; Brigadier எல் எஸ் லிடர்; Lt Col ஹர்ஜிந்தேர் சிங்; Naik குரு சேவக் சிங்; Naik ஜிதேந்திர குமார்; L. Naik விவேக் குமார்; L Naik சாய் தேஜா, Hav சத்பால் அவர்கள் உள்ளிட்ட 13 வீரமரணமடைந்த பாரத அன்னையின் தவ பிள்ளைகளுக்கு, நமது கட்சியின் சார்பாக கண்ணீர் அஞ்சலி செலுத்தப்படும். நம்முடைய சகோதர சகோதரிகளும் பங்கு பெறுமாறு அன்போடு கேட்டுக் கொள்கின்றேன்! ஜெய்ஹிந்த்


Share it if you like it